Wednesday, March 25, 2009

போர்டு ' ஐகான் ' விலை ஏப்ரலில் இருந்து உயருகிறது

போர்டு ஐகானின் விலை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயருகிறது. ஏப்ரலில் இருந்து அதன் விலை 1.5 சதவீதம் வரை உயருகிறது என்று போர்டு இந்தியாவின் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( மார்க்கெட்டிங், சேல்ஸ், அண்ட் சர்வீஸ் ) நிகல் வார்க் தெரிவித்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் நாங்கள் இந்த விலை உயர்வை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடந்த மூன்று மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு குறைந்து, நேற்று அதன் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.50.70 ஆக குறைந்திருந்தது என்றார். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால், காருக்கான பாகங்களை இறக்குமதி செய்யும்போது அதிகம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் நாங்கள் காரின் விலையை உயர்த்தவேண்டியிருக்கிறது என்றார் அவர். கடந்த நவம்பரில் தான் போர்டு நிறுவனம், ஐகான் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் காரை வெளியிட்டது. அதன் பெட்ரோல் காரின் விலை ரூ.4.59 லட்சமாகவும் ( எக்ஸ் - ஷோரூம் டில்லி ) டீசல் காரின் விலை ரூ.5.19 லட்சமாகவும் இருக்கிறது. இருந்தாலும் இப்போது விலை உயர்த்தியிருப்பது அதன் ஆரம்ப கட்ட மாடல் ஐகானுக்கு தான். மற்ற மாடல்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுதான் இருக்கிறது. இப்போது பெட்ரோல் மாடல் கார்களுக்கு கிராக்கி அதிகரித்து வருவதால், நாங்களும் பெட்ரோல் மாடல் ' ஐகான் ' மற்றும் ' பியஸ்டா ' கார்களை அதிக அளவில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார் வார்க்.
நன்றி : தினமலர்


No comments: