Wednesday, March 25, 2009

இப்போது ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க் தான் இந்தியாவின் மதிப்பு மிக்க தனியார் வங்கி

ஐசிஐசிஐ பேங்கை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் இந்தியாவின் மதிப்பு மிக்க தனியார் வங்கி என்று பெயரெடுத்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்கு மதிப்பு 6 சதவீதம் உயர்ந்திருப்பதை அடுத்து இந்த பெயர் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ யின் சந்தை முதலீடு இன்று ரூ.39,516.58 கோடியாக குறைந்திருக்கிறது. ஆனால் அதன் போட்டி வங்கியும் இந்தியாவின் இரண்டாவது தனியார் வங்கியுமான ஹெச்.டி.எஃப்.சி.,யின் சந்தை முதலீடு ரூ.41,001 கோடியாக உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று பகல் நேர வர்த்தகத்தின் போது ஹெச்.டி.எஃப்.சி.,வங்கியின் பங்கு மதிப்பு 10.09 சதவீதம் உயர்ந்து, ரூ.973.90 ஆக இருந்தது. பொதுவாகவே இன்று அதன் பங்கு மதிப்பு 6.31 சதவீதம் உயர்ந்து ரூ.940.50 ஆக இருக்கிறது. அதே நேரம் பகல் நேர வர்த்தகத்தின் போது ஐசிஐசிஐ பேங்க்கின் பங்கு மதிப்பு 7.69 சதவீதம் மட்டும் உயர்ந்து ரூ.373.30 ஆகவும், பொதுவாக இன்று அதன் மதிப்பு 2.44 சதவீதம் மட்டும் உயர்ந்து ரூ.355.10 ஆக இருக்கிறது. சந்தை மூலதனத்தை பொருத்தவரை, கடந்த வருடம் வரை 10 நிறுவனங்களுக்குள் ஒன்றாக இருந்த ஐசிஐசிஐ பேங்க், இப்போது 18 வது இடத்திற்கு போயிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: