Wednesday, March 25, 2009

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்தது

பங்கு சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்த போது அதிகம் மாற்றமின்றி இருந்த பங்கு சந்தையில், மதியத்திற்கு மேல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கேப்பிட்டல் குட்ஸ், மெட்டல், ரியல் எஸ்டேட், பேங்கிங், எஃப்.எம்.சி.ஜி., பிரைவேட் பவர் கம்பெனிகள்,மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால் சந்தை உயர்ந்தே இருந்தது. இருந்தாலும் ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி.,பார்தி, ஹெச்.யு.எல், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ரான்பாக்ஸி பங்குகள் அதிகம் விற்கப்பட்டது. மாலை வர்த்தகம் முடியும் போது மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 196.86 புள்ளிகள் ( 2.08 சதவீதம் ) உயர்ந்து 9,667.90 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 45.65 புள்ளிகள் ( 1.55 சதவீதம் ) உயர்ந்து 2,984.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அதிகம் பயனடைந்தது ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டாடா பவர், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், டிஎல்எஃப், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவைகள் தான். இவைகளின் பங்கு மதிப்பு 5.6 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. மற்ற எல்லோரையும் காட்டிலும் அதிகம் உயர்ந்திருந்தது யூனிடெக் நிறுவன பங்குகள் தான். அதன் மதிப்பு 16.87 சதவீதம் உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


No comments: