Thursday, February 26, 2009

மார்ச் 23ம் தேதி வெளிவருகிறது டாடாவின் ' நானோ ' கார்

உலகின் மிக மலிவான காரான ' நானோ 'வை, வரும் மார்ச் மாதம் 23ம் தேதி மும்பையில் வர்த்தக ரீதியாக டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது. ஏப்ரலில் இருந்து அந்த காருக்கான புக்கிங் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனவரி 2008 ல் புதுடில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ வில் பொதுமக்களுக்காக நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும், வர்த்தக ரீதியாக வரும் மார்ச் 23ம் தேதிதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. மும்பையில் மார்ச் 23ம் தேதி இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியா முழுவதிலும் இருக்கும் டாடா மோட்டார்ஸின் டீலர்களிடம் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் இது பார்வைக்கு வைக்கப்படும். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்துதான் அதற்கான புக்கிங் ஆரம்பமாகும். புக்கிங் விபரங்கள், 23ம் தேதி நடக்கும் அறிமுக விழாவில் சொல்லப்படும் என்று டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 2008 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நானோ கார் ஜெனிவாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இதனை பார்வையிட்ட வெளிநாட்டு கார் கம்பெனிகள், தாங்களும் இம்மாதிரி குறைந்த விலை காரை தயாரிக்க வேண்டும் என்று எண்ணின. பிரான்சின் நிஸன் - ரெனால்ட் நிறுவனம், குறைந்த விலை ஃபேமிலி காரை விரைவில் வெளியிடுவதாக அப்போது அறிவித்தது. ஆனால் பொருளாதார மந்த நிலை காரணமாக அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: