Wednesday, February 25, 2009

சிறிது முன்னேறி முடிந்தது பங்கு சந்தை

உற்பத்தி வரி மற்றும் சேவை வரியில் தலா 2 சதவீதத்தை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவித்தது, ஆசிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற நிலை போன்றவற்றால் இந்திய பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே ஏறி இருந்த குறியீட்டு எண்கள், மாலை வரை தொடர்ந்தது. இன்று ஆயில் அண்ட் கேஸ், டெக்னாலஜி, ஆட்டோ, மெட்டல், பேங்கிங் மற்றும் பவர் பங்குகள் விலை உயர்ந்திருந்தன. ஹெச்.டி.எப்.சி, எல் அண்ட் டி., டி.எல்.எப், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரான்பாக்ஸி, ஏபிபி, அம்புஜா சிமென்ட்ஸ், மற்றும் ஏசிசி நிறுவன பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 80.50 புள்ளிகள் ( 0.91 சதவீதம் ) உயர்ந்து 8,902.56 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 28.60 புள்ளிகள் ( 1.05 சதவீதம் ) உயர்ந்து 2,762.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: