Thursday, February 26, 2009

பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்தில் நிர்வாகத்தின் பங்கை அதிகரிக்க திட்டம் ?

இ.பி.எஃப்., எனப்படும் எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்தில்,தொழிலாளர்களுக்கு அதிக பயன்கள் கிடைக்க செய்வது எப்படி என்பதை ஆராய்ந்து அறிக்கை கொடுக்க இரண்டு கமிட்டிகளை நியமித்திருப்பதாக மத்திய அரசு இன்று பார்லிமென்ட்டில் தெரிவித்தது. பார்லிமென்ட்டில் இன்று இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்ணான்டஸ், ஆறாவது சம்பள கமிஷனுக்காக எம்ப்ளியீஸ் பென்சன் ஸ்கீம் 1995ல் மாற்றம் எதுவும் செய்யப்போவதில்லை என்றும், இ.பி.எஃப் குறித்து ஆராய்ந்து அறிக்கை கொடுக்க இரண்டு தனி குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அதில் ஒரு குழு, தனி செகரட்டரி தலைமையில் கூடி, இ.பி.எஃப்., திட்டத்தில் தொழிலாளர்களுக்கு எப்படியெல்லாம் பயனை அதிகரிக்க செய்யலாம் என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்கும் என்றார். அவர்களது அறிக்கை கிடைத்ததும், அது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றார். இ.பி.எஃப்., திட்டத்தின் முழு பயன்களை தொழிலாளர்கள் அடைய செய்வதற்காக, இ.ப்.எஃப்.,திட்டத்தில் அரசு மற்றும் நிர்வாகம் செலுத்தும் பங்கை அதிகரிக்க செய்யலாமா என்று ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: