Thursday, February 26, 2009

ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து மதியம் 2.30 மணி வரை குறைந்திருந்த குறியீட்டு எண், அதன் பின்னர் உயர துவங்கியது. மதியத்திற்கு மேல் பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்ததால் மதியத்திற்கு மேல் பங்கு சந்தை உயர ஆரம்பித்தது. ஆட்டோ, மெட்டல், டெலிகாம், ஆயில் கம்பெனிகளில் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இருந்தாலும் ஐசிஐசிஐ பேங்க், எஸ்.பி.ஐ., ரான்பாக்ஸி, ஹெச்.டி.எஃப்.சி, டாடா பவர், விப்ரோ, மற்றும் ஹின்டல்கோ ஆகிய நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சர்வதேச பங்கு சந்தைகளில் இருந்த ஏற்ற நிலை மற்றும் பணவீக்க விகிதம் குறைந்திருப்பதாக வந்த அறிவிப்பு போன்றவையும் சந்தைக்கு சாதகமான அம்சமாக இருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 52.30 புள்ளிகள் ( 0.59 சதவீதம் ) உயர்ந்து 8,954.86 புள்ளிகளில் முடிந்திருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 23.15 புள்ளிகள் ( 0.84 சதவீதம் ) உயர்ந்து 2,785.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. பிப்ரவரி 14ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 3.36 சதவீதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் 3.92 சதவீதமாக இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: