Thursday, November 20, 2008

மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது

இந்தியாவில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பதில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் பணப்புழக்கமும் அதிகரித்திருக்கிறது; மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதும் அதிகரித்திருக்கிறது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இன்டியாவின் சேர்மன் குரியன் தெரிவித்தார். பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் வேலை செய்திருக்கிறது என்றார் அவர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிப்பதற்கும் அது உதவியிருக்கிறது. அக்டோபரில் கடும் சிக்கலில் இருந்த மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரி, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் இந்த மாதத்தில் மீண்டு வந்துவிட்டது. அக்டோபருக்குப்பின் கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (சி.ஆர்.ஆர்.,) 3.5 சதவீதமும், ரிபோ ரேட்டை 1.5 சதவீதமும் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதற்குப்பின் இந்த இன்டஸ்டிரியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரிக்கு இதுவரை 14 - 18 சதவீத வட்டிக்கு நிதி அளித்துக்கொண்டிருந்த இந்திய வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தலையீட்டுக்குப்பின் இப்போது 10.5 - 11 சதவீத வட்டிக்கு தாராளமாக நிதி அளிக்கின்றன என்றார் அவர்.
நன்றி : தினமலர்

No comments: