Thursday, November 20, 2008

இனிமேல் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் சிகரெட் பாக்கெட்களை வைத்திருக்க தடை வரும் ?

இனிமேல் பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ், டன்ஹில் போன்ற வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் கிடைக்காது என்று தெரிகிறது. சிகரட் பிடிப்பதை இந்தியா முழுவதும் தடை செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இப்போது மேலும் ஒரு முயற்சியாக டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் வெளிநாட்டு சிகரெட்களை வைத்திருக்க தடை விதிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் லிஸ்டில் இருந்து சிகரெட்டை எடுத்துவிட அவர் முயற்சிப்பதாக தெரிகிறது. நாடுகளிடையே ஏற்படுத்தப்படும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் ( எஃப்.டி.ஏ ) பெரும்பாலான நாடுகள், சிகரெட் பாக்கெட்டை லிஸ்டில் இருந்து எடுத்து விட்டன. ஆனால் இலங்கை போன்ற சில நாடுகள் இன்னும் எடுக்கவில்லை. எனவே இனிமேல் இலங்கையுடன் எஃப்.டி.ஏ., செய்யும்போது சிகரெட் பாக்கெட்டை லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிட அன்புமணி ராமதாஸ் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு சிகரெட்கள் குறைந்த விலையில் இந்தியாவில் கிடைப்பது தடை செய்யப்படும். அதன் பின் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் சிகரெட் பாக்கெட் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
நன்றி : தினமலர்


No comments: