Thursday, November 20, 2008

தங்கம் உபயோகிப்பதில் தொடர்ந்து இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது

உலகில் அதிகம் தங்கம் உபயோகிப்பதில் தொடர்ந்து இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல் இதனை உறுதி செய்கிறது. வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் ( டபிள்யூ.ஜி.சி.) சமீபத்தில் வெளியிட்ட கோல்ட் டிமாண்ட் டிரன்ட்ஸ் என்ற அறிக்கையில், கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் இந்தியாவில் வாங்கப்பட்ட தங்க நகைகளின் அளவு 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்திருந்தாலும், இந்தியாவில் தங்கம் அல்லது தங்க நகை விற்பனை அதிகரித்துதான் இருக்கிறது. கடந்த வருடத்தில் ரூ.12,300 கோடிக்கு விற்பனை ஆகி இருந்த தங்கம் இந்த வருடத்தில், செப்டம்பர் வரை ரூ.21,900 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. இந்த வருடம் 178 டன் தங்கம் விற்பனை ஆகி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் இது 29 சதவீதம் அதிகள். பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்திருப்பதால் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு என்று கருதுவதாலும் தங்கம் விற்பனை அதிகரித்ததற்கு காரணம் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: