Tuesday, November 18, 2008

9,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது சென்செக்ஸ்

சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து இந்தியாவிலும் பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு கீழும் நிப்டி 2,700 புள்ளிகளுக்கும் கீழும் சென்று விட்டது. டெலிகாம், டெக்னாலஜி, பேங்கிங், பவர், மெட்டல், கேப்பிட்டல் குட்ஸ், மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சரிந்து கொண்டிருந்த சென்செக்ஸ் பகல் வேளையில் 8,871.71 புள்ளிகள் வரை சென்றது. பின்னர் ஓரளவு மீண்டு வந்து, வர்த்தக முடிவில் 353.81 புள்ளிகளை ( 3.81 சதவீதம் ) இழந்து 8,937.20 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2,664.30 புள்ளிகள் வரை சென்று, பின்னர் 116.40 புள்ளிகளை ( 4.16 சதவீதம் ) இழந்து 2,683.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ, என்டிபிசி, ஏசிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், நால்கோ, யூனிடெக், ஐடியா செல்லுலார் மற்றும் ஹெச்சிஎல் டெக் ஆகியவை 6.8 - 13 சதவீதம் குறைந்திருந்தது. இருந்தாலும் ரான்பாக்ஸி, ஹீரோ ஹோண்டா, சன் பார்மா பங்குகள் உயர்ந்திருந்தன. உலக அளவில் பங்கு சந்தைகளில் இன்று வீழ்ச்சியே காணப்பட்டது. வளர்ந்த நாடுகள் பலவற்றில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வங்கிகள் உள்பட பல பெரிய நிறுவனங்கள் வேலை இழப்பு செய்தது போன்ற காரணங்களால் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆசிய சந்தைகளான ஷாங்கை 6.31 சதவீதம், ஹாங்செங்க் 4.54 சதவீதம், ஜகர்த்தா, ஸ்டெயிட் டைம்ஸ், தைவான், கோஸ்பி, போன்றவை 3 - 4 சதவீதம், நிக்கி 2.28 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தைகளான எஃப்.டி.எஸ். இ 80 புள்ளிகள், சி.ஏ.சி., மற்றும் டி.ஏ.எக்ஸ்., 62 புள்ளிகள் மற்றும் 64 புள்ளிகள், குறைந்திருந்தன. அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 113 புள்ளிகள், நாஸ்டாக் 23.50 புள்ளிகள் குறைந்திருந்தன. உலகின் மிகப்பெரிய வங்கிகளான ஹெச்.எஸ்.பி.சி.,வங்கி 500 பேரையும் சிட்டி குரூப் 52,000 பேரையும் அடுத்த வருடத்தில் வேலையில் இருந்து நீக்குவதாக இன்று அறிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: