Wednesday, November 19, 2008

ஆறாவது நாளாக தொடர்ந்து பங்கு சந்தையில் வீழ்ச்சி

மும்பை பங்கு சந்தையில் தொடர்ந்து ஆறாவது வர்த்தக நாளாக வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காலை வர்தகம் ஆரம்பித்ததில் இருந்து மதியம் 2.30 வரை உயர்ந்திருந்த சந்தை, பின்னர் நடந்த ஒரு மணி நேர வர்த்தகத்தில் வீழ்ச்சியடைந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட சரிவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து உயர்ந்து கொண்டிருந்த சந்தையை பார்த்ததும், சந்தை மீண்டும் எழுந்து விட்டது என்றே எல்லோரும் எண்ணினர். மதியம் வரை நீடித்திருந்த அந்த எண்ணம், வர்த்தக முடிவு வரை நீடிக்கவில்லை. சந்தை மீண்டும் பழைய நிலைக்கே சென்று விட்டது. நிப்டி 2650 புள்ளிகளுக்கு கீழும் சென்செக்ஸ் 8800 புள்ளிகளுக்கும் கீழே சென்று விட்டது. கேப்பிடல் குட்ஸ், பவர், பேங்கிங், ஆயில், மெட்டல், டெலிகாம், மற்றும் டெக்னாலஜி பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டன. அதிகபட்டமாக 9,236.27 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 163.42 புள்ளிகள் ( 1.83 சதவீதம் ) குறைந்து 8,773.78 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிகபட்டமாக 2,772.40 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் 48.15 புள்ளிகள் ( 1.79 சதவீதம் ) குறைந்து 2,635.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் எல்லாமே வீழ்ச்சியில்தான் முடிந்திருக்கிறது. ஐரோப்பாவின் எஃப்.டி.எஸ்.ஸி., 77 புள்ளிகளும் சி.ஏ.சி. மற்றும் டி.ஏ.எக்ஸ். முறையே 52 மற்றும் 62 புள்ளிகளும் குறைந்திருந்தன. அமெரிக்க சந்தையை பொருத்தவரை டவ் ஜோன்ஸ் 119 புள்ளிகள், நாஸ்டாக் 21 புள்ளிகள் குறைந்திருந்தது. ஆசிய சந்தையில் ஹேங் செங்க் 0.77 சதவீதம், நிக்கி 0.66 சதவீதம், தைவான் 0.49 சதவீதம், ஜகர்தா 0.80 சதவீதம், ஸ்டெயிட்டைம்ஸ் மற்றும் கோஸ்பி முறையே 1.59 சதவீதம், 1.87 சதவீதம் குறைந்திருந்தது.

நன்றி : தினமலர்



No comments: