Wednesday, November 19, 2008

மாருதி சுசுகி அறிமுகப்படுத்திய புதிய ஏ ஸ்டார் கார்

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, அதன் புது மாடல் ஏ-ஸ்டார் காரை புதுடில்லியின் இன்று அறிமுகப்படுத்தியது. இந்த ஏ-ஸ்டார் காரின் விலை, அறிமுக விலையாக ரூ.3.47 லட்சத்தில் இருந்து ரூ.4.12 லட்சத்திற்குள் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் டிசைன் செய்யப்பட்டு இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ஏ-ஸ்டார் கார் இன்னும் நான்கு வருடங்களில் விற்பனைக்கு வரும் என்று மாருதி சுசுகி இந்தியாவின் மேனேஜிங் எக்ஸிகூடிவ் அதிகாரி ( இஞ்ஜினியரிங்) ராவ் தெரிவித்தார். இருந்தாலும் அது ஒரு சிறிய காரா அல்லது பெரிய காரா என்பதுபற்றி ராவ் சொல்ல மறுத்து விட்டார். முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏ-ஸ்டார் கார், மாருதியின் ஐந்தாவது குலோபல் மாடல் கார். இந்தியாவில் வருடத்திற்கு 50,000 கார்களை விற்கவும் வெளிநாடுகளுக்கு ஒரு லட்சம் கார்களை ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மனேசரில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் தான் இது தயாரிக்கப்படுகிறது. 998 சிசி திறனுடன், பெட்ரோல் இஞ்சின் பொருத்தப்பட்டு, மூன்று மாடல்களில் இந்த கார் வெளிவர இருக்கிறது. இந்தியா உள்பட 150 நாடுகளில் இந்த காரை விற்க மாருதி சுசுகி முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: