Friday, October 24, 2008

ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக குறைந்தது

இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக குறைந்திருக்கிறது. டாலர் ஒன்றுக்கு ரூ.50 க்கும் கீழே மதிப்பு குறைந்து விட்டது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் ஏற்பட்டு வரும் கடும் வீழ்ச்சியை அடுத்து, இந்திய பங்கு சந்தையில் செய்யப்பட்டிருக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் பலர் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இன்றைய காலை வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50.15 ஆக குறைந்து துவங்கியது. இது நேற்றைய வர்த்தக முடிவில் ரூ.49.81 ல் முடிந்திருந்தது.
நன்றி : தினமலர்


No comments: