Friday, October 24, 2008

பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1052 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது

மும்பை பங்கு சந்தையில் இன்று மதிய நேரத்தில் சென்செக்ஸ் 1,052 புள்ளிகளுக்கு மேல் குறைந்து விட்டது.ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட இடைக்கால மறு ஆய்வு அறிக்கையில், முக்கிய வட்டி விகிதம் எதையும் மாற்றாமல் இருந்ததால் வெறுப்படைந்த முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்க வந்ததால் இவ்வளவு புள்ளிகளை சந்தை இழக்க நேர்ந்தது என்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் 912 புள்ளிகளை ஏற்கனவே இழந்திருந்த சென்செக்ஸ், இன்று மதிய வேளையில் 1,052.18 புள்ளிகள் குறைந்து 8,719.52 புள்ளிகளாகி விட்டது. இந்த நிலை இதற்கு முன் கடந்த 2006 ம் ஆண்டு ஜூன் மாத்தில் தான் காணப்பட்டது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 343.05 புள்ளிகள் குறைந்து 2,600.20 புள்ளிகளாகி விட்டது. இது குறித்து பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில் ஆர்.பி.ஐ.வெளியிட்ட அறிக்கையில் சந்தைக்கு சாதகமான எந்த ஒரு அம்சமும் இல்லாததால், சந்தையில் விற்பனை விகிதம் கடுமையாக உயர்ந்து விட்டது. நிறைய பேர் பேங்க் பங்குகளை அதிக அளவில் விற்க ஆரம்பித்து விட்டார்கள் என்றனர்.
nandri : dinamalar


No comments: