Saturday, August 2, 2008

விமான கட்டணங்கள் உயர்வு


விமான எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, சில விமான நிறுவனங்களின் பயண கட்டணங்கள் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் விமான எரிபொருள் விலை 3 சதவீதம் அதிகரித்ததையடுத்து, ஜெட் ஏர்-வேஸ்,கிங் பிஷர் ஏர்-லைன்ஸ் ஆகியவை, தங்கள் விமான பயண கட்டணத்தை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. சாதா வகுப்பு, உயர் வகுப்புகளுக்கான கட்டணம் முறையே 5 சதவீதம் மற்றும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கிங்பிஷர்-டெக்கான் பயண கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. தற்போது, குறைந்த பயண கட்டணமாக டில்லி-மும்பைக்கு ஆறாயிரத்து 800 ரூபாய் மற்றும் இதர செலவுகள் சேர்த்து ஏழாயிரத்து 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. விரைவில் ஏர்-இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்களும் தங்கள் விமான பயண கட்டணத்தை உயர்த்த உள்ளன. இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக விமான பயண கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

நன்றி : தினமலர்


No comments: