Monday, December 14, 2009

கொள்கையை மறந்த கூட்டணிகள்

இந்​திய அர​சிய​லில் தனிக்​கட்சி ஆட்சி என்​பது முடிந்​து​விட்​டது.​ கூட்​டணி ஆட்​சியே கோலோச்​சு​கி​றது.​ சுதந்​தி​ரம் வாங்​கித் தந்​த​தா​கக் கூறும் காங்​கி​ரஸ் கட்​சி​யா​கவே இருந்​தா​லும்,​​ பிர​தான எதிர்க்​கட்​சி​யான பா.ஜ.க.வாக இருந்​தா​லும் சரி,​​ அவை கூட்​டணி இல்​லா​மல் வெற்​றி​பெற முடி​யாது என்ற நிலை உரு​வா​கி​விட்​டது.​

நேற்​று​மு​தல் ​ பகை​வர்​க​ளாக இருந்​த​வர்​கள் இன்று முதல் நண்​பர்​க​ளாக மாறு​வ​தும்,​​ இன்று நண்​பர்​க​ளாக இருப்​ப​வர்​கள் நாளை எதி​ரி​க​ளாக ஆவ​தும் சாதா​ரண குடி​மக்​க​ளுக்கு வேடிக்​கை​யாக இருக்​க​லாம்.​ ஆனால்,​​ அர​சி​யல்​வா​தி​க​ளுக்கு இது வாடிக்​கை​யா​கி​விட்​டது.​

இந்​தச் சந்​தர்ப்​ப​வா​தத்​துக்கு ஒரு தத்​துவ விளக்​க​மும் ​ கூறு​கின்​ற​னர்.​ "அர​சிய​லில் நிரந்​த​ர​மான நண்​பர்​க​ளும் இல்லை;​ நிரந்​த​ர​மான பகை​வர்​க​ளும் இல்லை' என்னே அரு​மை​யான கொள்கை விளக்​கம்,​​ பாருங்​கள்!​

நல்​ல​வர்​கள் அர​சி​ய​லுக்கு வரா​மல் ஒதுங்கி ஓடும் கார​ணம் புரி​கி​றதா?​ க​டந்த காலங்​க​ளில் ஆட்​சி​பு​ரிந்த காங்​கி​ரஸ் மீதும்,​​ பாஜக மீதும் மக்​கள் நம்​பிக்கை இழந்து போனார்​கள்.​ அவர்​க​ளுக்கு ஒரு மூன்​றா​வது அணி தேவைப்​பட்​ட​போது,​​ அந்​தச் சூழ்​நி​லையை இட​து​சா​ரி​கள் பயன்​ப​டுத்​திக் கொள்​ளத் தவ​றி​விட்​ட​னர்.​ அப்​போது அவர்​கள் காங்​கி​ரஸ் கட்​சிக்​குத் துணை​யாக நின்​ற​னர்.​ மத​வா​தக் கட்​சி​யான பாஜக ஆட்​சிக்கு வந்​து​வி​டக்​கூ​டாது எனக் கார​ணம் கூறி​னர்.​

கா​லம் கடந்து அவர்​கள் மூன்​றா​வது அணியை உரு​வாக்​கி​ய​போது மக்​கள் நிரா​க​ரித்து விட்​ட​னர்.​ காங்​கி​ரஸ் கட்​சிக்​குக் கடை​சி​வரை முட்​டுக் கொடுத்​துக் கொண்​டி​ருந்த இட​து​சா​ரி​க​ளின் அர​சி​யல் மீது அவர்​க​ளுக்கு நம்​பிக்கை வர​வில்லை.​

மா​நி​லங்​க​ளி​லும் இது​தான் நிலைமை;​ தமிழ்​நாட்​டில் ஒவ்​வொரு தேர்த​லி​லும் மாறி​மாறி ​ திமுக அல்​லது அதி​முக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் இட​து​சா​ரி​க​ளின் மீது மக்​க​ளுக்கு எப்​படி நம்​பிக்கை வரும்?​ மத்​தி​யில் மூன்​றா​வது அணி​யின் தேவையை உணர்ந்​த​வர்​கள் மாநில அர​சி​ய​லுக்கு மூன்​றா​வது அணி தேவை​யில்லை என்று முடிவு செய்​து​விட்​ட​து​தான் மிகப்​பெ​ரிய வேடிக்கை!​

க​டந்த மக்​க​ள​வைத் தேர்த​லின்​போது ஈழத்​த​மி​ழர் பிரச்னை உச்​ச​கட்​டத்​தில் இருந்​தது.​ கடை​சி​நாள் வரை பத​வி​சு​கத்தை அனு​ப​வித்த பாட்​டாளி மக்​கள் கட்சி,​​ உறவை முறித்​துக் கொண்டு அதி​மு​க​வு​டன் கூட்​டணி சேர்ந்து கொண்​டதை மக்​கள் எப்​படி ஏற்​பார்​கள்?​ விடு​த​லைப்பு​லி​களை ஆத​ரித்​துக்​கொண்​டி​ருக்​கும் மதி​மு​க​வும்,​​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி மற்​றும் மார்க்​சிஸ்ட் கட்​சி​யும் எதிர்​மா​றான கொள்​கை​க​ளைக் கொண்ட அதி​மு​க​வு​டன் கூட்​டணி அமைத்​துக் கொண்​டன.​

தேர்​தல் முடி​வு​கள் எதிர்​பார்த்​த​படி அமை​யாத நிலை​யில் அதி​மு​க​வு​டன் கூட்​டணி முடிந்​து​விட்​டது என பாமக மற்​றும் இட​து​சா​ரிக் கட்​சி​கள் ஒரு​த​ரப்​பாக அறி​வித்​தன.​ இதற்கு முன் நடந்த இடைத்​தேர்த​லில் பாம​க​வைத் தொடர்ந்து அதி​மு​க​வும் தேர்​த​லைப் புறக்​க​ணிப்​ப​தாக அறி​வித்​தன.​ இட​து​சா​ரி​கள் தனி​யாக நின்று படு​தோல்​வி​ய​டைந்​த​னர்.​ ஆனால்,​​ பாடம் கற்​ற​னரா என்​பது தெரி​ய​வில்லை.​

இப்​போது திருச்​செந்​தூர்,​​ வந்​த​வாசி ​(தனி)​ சட்​டப்​பே​ரவை இடைத் தேர்த​லில் அதி​முக நிற்​ப​தாக அறி​வித்​த​வு​டன் இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யி​னர் அவ​ச​ரம் அவ​ச​ர​மாக அதன் தலை​வ​ரைச் சந்​தித்து ஆத​ரவு தெரி​வித்​துள்​ள​னர்.​ மார்க்​சிஸ்ட் கட்​சி​யி​னர் அதி​மு​க​வுக்கு ஆத​ரவு தெரி​வித்​து​விட்டு,​​ அவர்​கள் மேடை​யில் பேசப் போவ​தில்லை என்​றும் தனி​யா​கவே கூட்​டம் போட்டு ஆத​ரவு தேடப் போவ​தா​க​வும் அறி​வித்​துள்​ள​னர்.​

"ஈழத் தமி​ழர் பிரச்​னை​யில் எங்​கள் கோரிக்​கையை மத்​திய அரசு கேட்​க​வில்லை' என்று நீலிக்​கண்​ணீர் வடிக்​கும் திமுக ,​​ காங்​கி​ர​சின் உறவை உத​றித்​தள்ள முன்​வ​ர​வில்லை.​ அப்​படி ஒரு நிலை உரு​வா​னால்,​​ அந்​தக் காங்​கி​ரஸ் கட்​சி​யு​டன் கூட்​டணி அமைக்க அதி​முக காத்​துக்​கொண்​டி​ருக்​கி​றது.​ இது​தான் இங்கே அர​சி​யல் கட்​சி​க​ளின் கூட்​ட​ணிக் கொள்கை.​

த​மி​ழ​கத்​தில் மறு​ப​டி​யும் இடைத்​தேர்​தல் அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ திருச்​செந்​தூர்,​​ வந்​த​வாசி ​(தனி)​ ஆகிய இரண்டு சட்​டப்​ பே​ர​வைத் தொகு​தி​க​ளுக்​கும் வரும் 19-ம் தேதி தேர்​தல் நடை​பெ​று​கி​றது.​ வாக்கு எண்​ணிக்கை டிசம்​பர் 23-ம் தேதி நடை​பெற்று அன்றே முடி​வு​கள் தெரிந்​து​வி​டும் என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

வந்​த​வாசி ​(தனி)​ தொகு​திக்கு அந்​தத் தொகுதி திமுக உறுப்​பி​ன​ராக இருந்த ஜெய​ரா​மன் மறைவு கார​ண​மாக அத் தொகு​தி​யில் தேர்​தல் நடை​பெ​று​கி​றது.​ திருச்​செந்​தூர் தொகு​தி​யில் அத் தொகுதி அதி​முக உறுப்​பி​ன​ராக இருந்த அனிதா ராதா​கி​ருஷ்​ணன் அந்​தப் பத​வியை ராஜி​நாமா செய்​து​விட்டு அதி​மு​கவி​லி​ருந்து விலகி திமு​க​வில் சேர்ந்​து​விட்​டார்.​ இத​னால் இந்​தத் தொகு​தி​யில் இடைத்​தேர்​தல் நடை​பெ​று​கி​றது.​

தி​ருச்​செந்​தூர் தொகு​தி​யில் 25 பேரும்,​​ வந்​த​வாசி ​(தனி)​ தொகு​தி​யில் 14 பேரும் போட்​டி​யி​டு​கின்​ற​னர்.​ இதில் திமுக,​​ அதி​முக,​​ தேமு​திக ஆகிய மூன்று கட்​சி​க​ளும் ​ மோது​வ​தால் மும்​மு​னைப்​போட்டி ஏற்​பட்​டுள்​ளது.​

இ​டைத்​தேர்​தல் என்​றாலே ஒரு பர​ப​ரப்​பு​தான்.​ இப்​போது ஆட்​சி​யில் இருக்​கும் ஆளும் கட்​சி​யின் மதிப்​பீடு அந்​தத் தேர்​தல் மூலம் கணிக்​கப்​ப​டும்.​ அத்​து​டன் வரப்​போ​கும் தேர்​த​லுக்​கான முன்​னோட்​ட​மா​க​வும் இது அமை​யும் என்​ப​தால் இந்த முடி​வு​கள் மக்​க​ளால் பர​ப​ரப்​பாக எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​

ஆ​ளும் கட்சி எப்​ப​டி​யா​வது வெற்றி பெற்​று​விட வேண்​டும் என்று எண்​ணு​வ​தும்,​​ அதனை எதிர்க்​கட்​சி​கள் எப்​ப​டி​யா​வது முறி​ய​டித்​து​விட வேண்​டும் என்று திட்​ட​மி​டு​வ​தும் இயல்பு.​ இத​னால்​தான் இடைத்​தேர்​தல் முக்​கி​யத்​து​வம் பெற்​று​வி​டு​கி​றது.​ லஞ்​ச​மும் ஊழ​லும் தலை​வி​ரித்து ஆடு​கி​றது.​

இ​டைத்​தேர்த​லில் வாக்​கா​ளர்​க​ளுக்​குப் பணம் விநி​யோ​கிப்​ப​தைத் தடுக்க தீவிர கண்​கா​ணிப்பு நட​வ​டிக்கை மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றும்,​​ வீடு​க​ளுக்​குப் பால்,​​ பத்​தி​ரிகை வினி​யோ​கம் செய்​ப​வர்​கள் தீவி​ர​மா​கக் கண்​கா​ணிக்​கப்​ப​டு​வர் என்​றும்,​​ மேலும் சுய​உ​த​விக்​கு​ழுக்​கள் மூலம் பணம் பட்​டு​வாடா நடை​பெ​றா​மல் தடுக்க அவர்​கள் மீது கண்​கா​ணிப்பு நட​வ​டிக்கை மேற்​கொள்​ளப்​ப​டும் என்​றும் தமி​ழ​கத் தேர்​தல் அதி​காரி நரேஷ் குப்தா கூறி​யுள்​ளார்.​

தேர்​தல் நேரங்​க​ளில் வாக்​குச் சேக​ரிக்க வரும் வேட்​பா​ளர்​க​ளி​டம்,​​ "எங்​கள் தெரு​வுக்​குக் குடி​நீர் வசதி வேண்​டும்;​ சாலை வசதி தேவை' என்று கோரிக்​கை​களை முன்​னி​றுத்​து​வார்​கள்.​ ஆனால்,​​ இப்​போது மக்​கள் பணம்​கேட்க ஆரம்​பித்து விட்​டார்​கள் என்​றும் அவர் வருத்​தத்​து​டன் கூறி​யுள்​ளார்.​

இ​தற்​குக் கார​ணம் என்ன?​ அர​சி​யல் கட்​சி​கள் தானே!​ அவர்​கள் மீது இது​வரை ஏதே​னும் நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டி​ருக்​கி​றதா?​ பெய​ருக்கு வழக்​கு​கள் போடு​வார்​கள்.​ அது அடுத்த தேர்​தல்​வரை தொட​ரும்.​ அவர்​கள் ஆளும் கட்​சி​யா​னால்,​​ அந்த வழக்​கு​கள் கிடப்​பில் போடப்​ப​டும் அல்​லது திரும்​பப் பெறப்​ப​டும்.​

வெற்றி பெற்​ற​தாக அறி​விக்​கப்​பட்ட வேட்​பா​ளரை எதிர்த்து வழக்​குத் தொடர்ந்​தால் அதன் தீர்ப்பு வர​வும்,​​ அடுத்த தேர்​தல் வர​வும் சரி​யாக இருக்​கும்.​ "வெற்றி பெற்​றது செல்​லாது' என்று அறி​விக்​கப்​பட்ட ​ தகு​தி​யி​ழந்த அந்த உறுப்​பி​னர்,​​ முழு​ப​த​விக்​கா​லப் பய​னை​யும் அனு​ப​வித்து விட்டே வெளி​யே​று​கி​றார்.​ அவர் இது​வரை பெற்ற ஊதி​யம் மற்​றும் சலு​கை​க​ளைப் பறி​மு​தல் செய்ய சட்​டத்​தில் இடம் இருக்​கி​றதா?​ இத்​தனை காலம் வழக்​கா​டி​ய​வர் பெறப்​போ​கும் பயன்​என்ன?​

""அர​சி​யல் கட்​சி​கள் பணம் கொடுத்​தால் வாக்​கா​ளர்​கள் வாங்​கக்​கூ​டாது'' என்​னும் பிர​சா​ரம் மக்​க​ளி​டம் எடு​ப​ட​வில்லை.​ எந்​தக் கொள்​கை​யும் இல்​லா​மல் கூட்​டணி அமைத்​துக் கொண்டு வெற்​றி​பெற்று பத​விக்​கா​வும்,​​ பணத்​துக்​கா​க​வும் அலை​யும் அவர்​க​ளி​டம்,​​ ""வாங்​கி​யது வரை ஆதா​யம்'' என்றே மக்​கள் நினைக்​கின்​ற​னர்.​

"உங்​க​ளுக்​காக உழைக்க எங்​க​ளுக்கு உத்​த​ர​வி​டுங்​கள்' என்​பது கேட்​ப​தற்கு நன்​றாக இருக்​கி​றதே தவிர நடை​மு​றை​யில் நன்​றாக இல்​லையே!​ மக்​கள் சேவைக்​கா​கவே பத​வி​க​ளைத் துச்​ச​மா​கத் தூக்கி எறிந்த தூய தலை​வர்​களை நாடு மறந்​து​விட்​டது.​ இப்​போது,​​ "மக்​கள் சேவையே மகே​சன் சேவை' என்று கூறி​னால் ஏற்​கப்​ப​டுமா?​

இந்த இடைத்​தேர்​தல் வெற்றி தோல்​வி​யால் எவ்​வி​தப் பய​னும் ஏற்​ப​டப் போவ​தில்லை.​ தேசத்​தின் பணம் விர​யம் செய்​யப்​ப​டு​கி​றது.​

ஆந்​தி​ரத்​தின் முன்​னாள் முத​ல​மைச்​சர் ராஜ​சே​கர ரெட்​டி​யின் மனைவி விஜ​ய​லட்​சுமி சட்​டப்​பே​ரவை இடைத்​தேர்த​லில் போட்​டி​யின்​றித் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​டி​ருக்​கி​றார்.​

அது​போல பொதுத் தேர்த​லில் வெற்​றி​பெற்ற கட்​சிக்கே அந்த இடத்தை அளித்து விடு​வ​தற்​கான தேர்​தல் திருத்​தங்​கள் கொண்​டு​வ​ரப்​பட வேண்​டும்.​

""இந்​தியா ஒரு பெரிய நாடாக இருப்​ப​தில் ஒரு விசே​ஷம் இருக்​கி​றது.​ கோல்​கத்​தா​வுக்​குப் போய் கம்​யூ​னி​சத்தை ஆத​ரித்​தும்,​​ அலா​கா​பாத்​துக்​குப் போய் முத​லா​ளித்​து​வத்தை ஆத​ரித்​தும்,​​ காரைக்​கு​டிக்​குப்​போய் வகுப்​பு​வா​தத்தை ஆத​ரித்​தும் பேச முடி​கி​ற​தல்​லவா?​'' என்று கவி​ஞர் கண்​ண​தா​சன் இந்​திய அர​சிய​லின் முரண்​பாட்​டைக் கேலி செய்​தார்.​ கொள்​கையை மறந்த கூட்​ட​ணி​க​ளுக்கு இது ஓர் ​ எச்​ச​ரிக்​கை​யா​கும்.
கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி

தண்ணீரை சுத்தப்படுத்தும் சாதனம்: டாடா நிறுவனம் அறிமுகம்

குடி தண்ணீரை வடிகட்டும் சாதனத்தை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுத்தமான குடிதண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு டாடா நிறுவனம் 'ஸ்வாச்' என்ற பெயரில் தண்ணீரை வடிகட்டும் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிலிப்ஸ், இந்துஸ்தான் லீவர், எம்.என்.சி.,போன்ற நிறுவனங்கள் தண்ணீர் வடிகட்டும் சாதனத்தை அறிமுகப்படுத்தி விட்டன.
இந்த வரிசையில் தற்போது டாடாவும் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக மும்பை, உத்தரபிரசேதம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சுத்தமான குடிநீரை வழங்கும் 10 லட்சம் 'ஸ்வாச்' சாதனங்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த சாதனத்தை பயன்படுத்த மின்சாரம் தேவையில்லை. டாடா கன்சல்டன்சி நிறுவனமும், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனமும், டைட் டான் நிறுவனமும் ஒன்று சேர்ந்து ஸ்வாச் குடிநீர் சாதனத்தை வடிவமைத்துள்ளன. அரிசி தவிடு போன்ற பொருளால் நானோ தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட வடிகட்டும் பொருள் மூன்றாயிரம் லிட்டர் தண்ணீரை வடிகட்டும் திறன் வாய்ந்தது. அதன் பிறகு இந்த வடிகட்டும் சாதனம் தண்ணீரை வடிகட்டுவதை நிறுத்தி விடும். பிறகு வேறு ஒரு பில்டரை மாற்றி கொள்ளலாம். 'ஸ்வாச்' தண்ணீர் சுத்தப்படுத்தும் சாதனத்தின் ஆயுட்காலம் ஐந்து முதல் ஆறாண்டு காலம். மஞ்சள்காமாலை, டைபாய்டு, காலரா,போலியோ உள்ளிட்ட நோய்கள் தண்ணீர் மூலம் பரவுகின்றன. ஸ்வாச் தண்ணீர் வடிகட்டும் சாதனத்தின் மூலம் இந்த நோய்கள் பரவுவதை தடுக்க முடியும், என டாடா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி : தினமலர்


விலை உயர்​வுக்​கு முன்பேர வர்த்தகம் காரணம் அல்ல

விலை உயர்​வுக்​கும் முன்​பேர வர்த்​த​கத்​துக்​கும் தொடர்​பில்லை என்று என்.​சி.​டி.​இ.​எக்ஸ் முன்பேர நிறு​வ​ன நிர்​வா​கத் தலை​வர் ஆர்.​ ராம​சே​ஷன் தெரி​வித்​தார். சென்​னை​யில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் பேசிய அவர், அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை உயர்​வைக் கட்​டுப்​ப​டுத்த அரசு உண​வுப் பொருள்​க​ளான பருப்பு,​​ சர்க்​கரை ஆகி​ய​வற்றை முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டுத்த தடை விதித்​தது.​ ஆனால் தடை விதிக்​கப்​பட்ட பிறகு இவற்றின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்​கி​யக் கார​ணமே தேவைக்​கேற்ப உற்​பத்தி இல்​லா​த​து​தான்.​ வெளி​நா​டு​க​ளில் முன்​பேர வர்த்​த​கத்​துக்கு ஒரு​போ​தும் தடை விதிப்​பது கிடை​யாது.​ அங்கு 100 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக முன்பேர வர்த்​தக நடை​முறை உள்​ளது.​ இத்​த​கைய சூழல் இந்​தி​யா​வில் உரு​வாக இன்​னும் பல ஆண்​டு​கள் ஆகும். முன்​பேர வர்த்​த​கம் தொடர்​பான விழிப்​பு​ணர்வை தொடர்ந்து என்​சி​டி​இ​எக்ஸ் ஈடுபட்டு வரு​கி​றது.​ இத​னால் முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டு​வோ​ரின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மாக உயர்ந்து வரு​கி​றது. முன்​பேர வர்த்​த​கத்​தால் நுகர்​வோ​ருக்கு மட்​டு மின்றி விவ​சா​யி​க​ளுக்​கும் கூடு​தல் விலை கிடைக்​கும் என்​றும் ராம​சே​ஷன் தெரிவித்தார்.
என்​சி​டி​இ​எக்ஸ் 2003ம் ஆண்டி​லி​ருந்து முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​பட்​டுள்​ளது.​ இதை கனரா வங்கி,​​ கிரி​சில்,​​ இஃப்கோ,​​ நபார்டு,​​ தேசிய பங்​குச் சந்தை,​​ எல்​ஐசி,​​ பஞ்​சாப் நேஷ​னல் வங்கி,​​ கோல்ட்​மேன் சாஷ்,​​ இன்​டர்​நே​ஷ​னல் எக்ஸ்​சேஞ்ச்,​​ ரேணுகா சுகர்ஸ் ஆகிய நிறு​வ​னங்​கள் இணைந்து தொடங்​கி​யுள்​ளன.​ இந்​நி​று​வ​னத்​தில் 5 லட்​சம் வாடிக்​கை​யா​ளர்​கள் உள்​ள​னர்.​ இந்​நி​று​வ​னம் 39 வேளாண் உற்பத்தி பொருட்​கள்,​ 6 உலோ​கங்​கள்,​​ 3 பாலி​மர்​கள்,​​ 4 எரி​சக்தி பொருள்​கள் உட்பட 59 பொருட்​க​ளின் முன்​பேர வர்த்​த​கத்​தில் ஈடு​பட்​டுள்​ளது.​ நாடு முழு​வ​தும் 700 மையங்​க​ளில், இருபதாயிரம் டெர்​மி​னல்​க​ளு​டன் செயல்​ப​டு​கி​றது.​ ​
நன்றி : தினமலர்


Sunday, December 13, 2009

பயோகான் நிறுவனம் சாப்பிடக்கூடிய இன்சுலின் மருந்து தயாரிக்கிறது

பெங்களூரைச் சேர்ந்த மருந்து நிறுவனமான பயோகான், சாப்பிடக் கூடிய இன்சுலின் மருந்துப் பொருள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இடையூறு இல்லாமல் நடைபெறுமானால் 2011ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த இன்சுலின் மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிரண் மசூம்தார் தெரிவித்தார். புதிய மருந்துக்கு இன்-105 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை மற்றும் ஆய்வுகள் மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். நாடு முழுவதுமாக 15 ஆராய்ச்சி மையங்களில் இந்த மருந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் இந்த மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவற்கான ஒப்புதல் மற்றும் உரிமம் போன்றவற்றைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.
நன்றி :தினமலர்


Saturday, December 12, 2009

வாய்​மூடி மெüனி​க​ளாக...

கட​லை​வி​டப் பெரிது "கருணை' மனம் ​ என்​பர்.​ இந்த அவ​சர உல​கில் சுய​ந​லம்,​​ லாப நோக்கு,​​ நமக்​கென்ன வந்​தது என்ற ஒரு​மு​கச் சிந்​தனை...​ போன்​றவை நாலா​பக்​க​மும் பர​விக் கிடப்​பதை நாம் கவ​லை​யு​டன் உற்​று​நோக்க வேண்​டி​யுள்​ளது.​

ந​வ​நா​க​ரி​கச் சிந்​த​னை​யில் சிக்​கி​யுள்ள இன்​றைய மனி​தர்​கள் பலர்,​​ தங்​கள் கண்​முன் நடக்​கும் எந்​தச் சம்​ப​வங்​க​ளை​யும் கண்​டு​கொள்​வ​தா​கத் தெரி​ய​வில்லை.​ "நமக்​கேன் வம்பு' என்ற மனப்​பான்​மை​யில் அவ​ர​வர் வேலை​யைப் பார்த்​து​விட்​டுச் செல்​லும் வழக்​கம் இன்​றைய சூழ​லில் அதி​க​ரித்து வரு​கி​றது.​

தள்​ளாத வய​தி​லும்,​​ முக்​கி​யப் பணி நிமித்​த​மாக அவ​ச​ர​மா​கப் பஸ்​ஸில் ஏறும் வயோ​தி​கர்​கள்​கூட சிறப்​புக் கட்​டண பஸ்ஸô,​​ எல்.எஸ்.எஸ்.​ பஸ்ஸô,​​ சாதா​ரண பஸ்ஸô என பார்த்​துத்​தான் ஏற​வேண்​டும் என்று நடத்​து​நர்​கள்,​​ ஓட்​டு​நர்​கள் நினைக்​கின்​ற​னர்.​
அப்​ப​டியே ஒரு​வர் அவ​ச​ரத்​தில் பஸ்​ஸில் ஏறி​விட்​டால் அந்​தப் பய​ணிக்கு ஒரு​சில நடத்​து​நர்​க​ளால் கொடுக்​கப்​ப​டும் "அர்ச்​சனை' சொல்​லில் அடங்​காது.​ அந்​தப் ​ பய​ணி​யைக் குறிப்​பிட்ட பஸ் நிறுத்​தத்​தில் இறக்​கி​வி​டு​வ​தற்​குப் பதி​லாக வேறொரு நிறுத்​தத்​தில் வேண்​டு​மென்றே இறக்​கி​வி​டும் செயல்​க​ளை​யும் நாம் பார்க்க முடி​கி​றது.​
ஒரு பய​ணிக்கு இப்​படி நேர்ந்​து​விட்​டதே என நினைத்​துத் திரைப்​ப​டங்​க​ளில் வேண்​டு​மா​னால் "ஹீரோ' தட்​டிக்​கேட்​பதை ஆவ​லோடு நாம் எதிர்​பார்ப்​போம்;​ ஏற்​றுக்​கொள்​வோம்.​ ஆனால்,​​ இது​போன்ற உண்​மைக் காட்​சியை பஸ்​ஸில் நேர​டி​யா​கப் ​ பார்க்​கும் பய​ணி​க​ளில் ஒரு​வ​ருக்​குக்​கூ​டத் தட்​டிக்​கேட்​கும் மனப்​பான்மை இல்​லா​மல் வாய்​மூடி மெüனி​க​ளா​கி​வி​டு​கின்​ற​னர்.​

ப​ய​ணி​க​ளி​டம் அன்​பும்,​​ பரி​வும் காட்​டு​வேன் என அவர்​கள் ​(ஓட்​டு​நர்,​​ நடத்​து​நர்)​ பணி​யில் சேர்ந்​த​போது எடுத்​துக்​கொண்ட உறு​தி​மொழி எங்கே போனது?​

"வரு​மா​னம் ஈட்​டி​வந்த குடும்​பத் தலை​வர் திடீ​ரென மர​ண​ம​டைய நேரி​டு​கி​றது.​ 3 பெண் குழந்​தை​களை வைத்​துக்​கொண்டு 35 வயதே ஆன அவ​ரது மனைவி,​​ அர​சின் சமூ​க​ந​லப் பாது​காப்​புத் திட்​டத்​தில் உத​வித் தொகைக்​காக விண்​ணப்​பித்து காத்​துக்​கி​டக்​கி​றார்.​

அ​வ​ருக்​குச் சம்​பந்​தப்​பட்ட தாலுகா அலு​வ​ல​கத்​தில் இருந்து அழைப்பு வரு​கி​றது.​ உங்​க​ளுக்​கான உத​வித்​தொகை ரூ.10,000}க்கான காசோலை தயா​ராக உள்​ளது.​ ரூ.3 ஆயி​ரம் லஞ்​சம் கொடுத்​தால் காசோ​லை​யைப் பெற்​றுக்​கொள்​ள​லாம் என அரசு ஊழி​யர் ஒரு​வர் அந்த பெண்​ணி​டம் "பேரம்' பேசு​கி​றார்.​ அந்​தப் பெண்​மணி லஞ்ச ஒழிப்பு போலீ​ஸô​ரை​நாடி தனது உரி​மை​யைப் ​(உத​வித்​தொ​கையை)​ பெற்​றுக்​கொண்​டார்' என்று பத்​தி​ரி​கைச் செய்தி தெரி​விக்​கி​றது.​

இச்​சம்​ப​வத்​தில்,​​ வாழ​வேண்​டிய வய​தில் கண​வனை இழந்து,​​ 3 பெண் குழந்​தை​களை வைத்​துக்​கொண்டு சமு​தா​யத்​தில் போராட வேண்​டிய பெண்​ணுக்கு,​​ ஆறு​த​லாக அரசு அளிக்​கும் உத​வித்​தொ​கைக்​கு​கூட ஈவு​இ​ரக்​கமே இல்​லா​மல் லஞ்​சம் கேட்​கும் அதி​கா​ரி​யின் மனப்​போக்கை நாம் என்​ன​வென்று சொல்​வது!​
க​ண​வனை இழந்து மனம் நொந்து தவிக்​கும் இது​போன்ற ஒரு பெண்​ணி​டம் இத​யமே இல்​லா​மல் கொள்​ளை​ய​டிக்​கும் இது​போன்ற ஒரு​சில அதி​கா​ரி​க​ளின் "ஈர​மில்லா' எண்​ணங்​களை எப்​படி,​​ யாரால் மாற்​று​வது?​

அண்​மை​யில் மது​ரை​யில் நடந்த சம்​ப​வம் இது }​ ஒரு இளம் போலீஸ்​கா​ரர் மனைவி ஒரு​வர் தீயிட்​டுத் தற்​கொ​லைக்கு முயன்​றுள்​ளார்.​ அவ​ரைக் காப்​பாற்​றச் சென்​ற​போது அந்த போலீஸ்​கா​ர​ரும் தீக்​கா​ய​ம​டைந்​தார்.​
இரு​வ​ருமே ஒரு பிர​பல மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​ட​னர்.​ 30 சத​வி​கி​தமே தீக்​கா​ய​ம​டைந்த அந்​தப் பெண்,​​ சுமார் 50 தினங்​கள் வரை அந்த மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்​சை​யில் இருந்து உயி​ரி​ழந்​தார்.​ இதில்,​​ மன​தைப் பத​ற​வைக்​கும் விஷ​யம் என்​ன​வென்​றால்,​​ மருந்து,​​ மாத்​திரை,​​ சிகிச்​சைக்​கான கட்​ட​ணங்​கள் முழு​வ​தை​யும் வசூல் செய்த பின்​னரே அந்​தப் பெண் உயி​ரி​ழந்​து​விட்​ட​தாக உற​ வி​னர்​க​ளுக்​குத் தெரி​விக்​கப்​பட்​டது.​

ம​னி​த​நே​ய​மற்ற இது​போன்ற செயல் இப்​பூ​வு​ல​கில் வேறெங்​கும் நடக்​குமா என்​பதை நாம் கற்​பனை செய்​து​கூ​டப் பார்க்க முடி​ய​வில்லை.​
மர​ணப் படுக்​கை​யில் உள்ள மனித உயிர்​க​ளுக்கு விலை வைத்து,​​ பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தி​ன​ருக்கு உலை​யும் வைத்து பணம் சம்​பாத்​தி​யமே ஒரே குறிக்​கோள் என்ற நோக்​கத்​தில் பய​ணிக்​கும் ஒரு​சில மருத்​து​வ​ம​னை​க​ளின் போக்​கால் ஏற்​ப​டும் விப​ரீ​தத்தை நாம் நினைத்​துப் பார்க்​கக்​கூட முடி​ய​வில்லை.​

பார்ப்​ப​தற்கே அரு​வெ​றுப்​பான தோற்​றத்​து​டன்,​​ ஈ மொய்க்​கும் நிலை​யில் இருந்த தொழு​நோ​யா​ளி​க​ளை​யும் தனது கரு​ணைக் கண்​ணால் உற்​று​நோக்கி,​​ அவர்​க​ளி​டத்​தில் மனதை மட்​டும் ​ பார்த்​துப் பேசி,​​ அர​வ​ணைத்து,​​ தாய்மை போற்​றிய அன்னை தெரஸô வாழ்ந்​த​தும் இப்​பூ​வு​ல​கில்​தானே.​

க​ட​வு​ளுக்கு இணை​யாக மதிக்​கப்​ப​டும் மருத்​துவ உல​கமே இப்​ப​டித் திசை​மா​றிச் செல்​லத் தொடங்​கி​யுள்ள இந்த பேரா​பத்து எங்கு போய் முடி​யும்?​

து​ளி​யும் கரு​ணை​யில்​லாத கல் நெஞ்​சக்​கா​ரர்​க​ளின் இது போன்ற தவ​று​கள்,​​ சமு​தா​யத்​தில் எதிர்​வி​ளை​வு​களை ஏற்​ப​டுத்​தும் என்​பது சமூக ஆர்​வ​லர்​க​ளின் கவலை.​

எ​னவே,​​ இது​போன்ற மனி​தர்​க​ளின் தவ​று​கள் உரிய நேரத்​தில் தண்​டிக்​கப்​ப​ட​வேண்​டும்.​ ஆனால்,​​ பண​ப​லம்,​​ அதி​கா​ர​ப​லம் உள்​ளிட்​ட​வற்​றால் அவர்​கள் காப்​பற்​றப்​பட்​டு​வி​டு​வது சமு​தா​யத்​தின் சாபக்​கேடே.​

இ​த​னால்,​​ கோபம் கொள்​ளும் சமூக அக்​க​றை​யுள்ள சிந்​த​னை​யா​ளர்​கள் கிளர்ந்​தெழ வேண்​டிய சூழ்​நிலை உரு​வா​கும்.​ இது​போன்ற கிளர்ச்​சி​களை ஆரம்​பத்​தி​லேயே தடுக்க ஆட்​சி​யா​ளர்​கள் முன்​வ​ர​வேண்​டும்.​ இல்​லை​யென்​றால் வழக்​கம்​போல் "தும்பை விட்டு வாலைப் பிடித்த' கதை​யா​கி​வி​டும்.
கட்டுரையாளர் : கொ.காளீஸ்​வ​ரன்
நன்றி : தினமணி

கேள்வி கேட்​பார் இல்​லையா?

பொது மக்​க​ளுக்கு ஏற்​ப​டும் குறை​பா​டு​கள் ஒன்று சட்​டத்​தின் தவ​றான விதி​மு​றை​க​ளால் இருக்​க​லாம் அல்​லது அரசு நிர்​வா​கத்​தில் நில​வும் கால​தா​ம​தம்,​​ அலட்​சி​யப் போக்கு,​​ ஊழல் போன்​ற​வற்​றால் மக்​கள் அவ​தி​யு​ற​லாம்.

சட்​டத்​தின் குறை​பா​டு​களை நீக்​கு​வ​தற்​கான அதி​கா​ரம் நாடா​ளு​மன்​றம் அல்​லது சட்​ட​மன்​றங்​க​ளுக்கு இருக்​கி​றது.​ நிர்​வா​கத்​தின் சீர்​கே​டு​க​ளால் ​ நடை​பெ​றும் அநீ​தி​க​ளைக் களை​ய​வும்,​​ அர​சாங்​கத்​தின் வரவு-​செல​வுத் திட்​டங்​க​ளைக் கண்​கா​ணித்து மக்​க​ளின் தேவை​களை நிறை​வேற்​றும் வகை​யில் மக்​கள் பிர​தி​நி​தி​கள் செயல்​பட வேண்​டும்.​

அன்​றாட வாழ்​வில் நாட்டு மக்​க​ளுக்கு ஏற்​ப​டும் பல்​வேறு குறை​களை நிர்​வா​கத்​தின் கவ​னத்​துக்​குக் கொண்​டு​வந்து தக்க நட​வ​டிக்​கை​களை எடுக்க நாடா​ளு​மன்ற முறை​யில் உள்ள வாய்ப்​பு​
க​ளில் மிக முக்​கி​ய​மா​னது கேள்வி நேரம்.​

கேள்வி நேரம் என்​பது இங்​கி​லாந்​தின் நாடா​ளு​மன்​றத்​தில் 18-ம் நூற்​றாண்​டில் தொடங்​கி​யது.​ ​ ​ ​ ​ ​

இங்​கி​லாந்து நாடா​ளு​மன்ற முறை​யைப் பின்​பற்​றும் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தின் இரு அவை​க​ளி​லும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேர​மாக ஒதுக்​கப்​ப​டு​கி​றது.​ அதி​க​பட்​ச​மாக இரு அவை​க​ளி​லும் நேரிடை பதி​லுக்​காக தலா இரு​பது கேள்​வி​கள் எடுத்​துக்​கொள்​ளப்​ப​டும்.​ ஒவ்​வொரு நாளும் குறிப்​பி​டப்​பட்ட துறை​யின் அமைச்​சர் நேரி​டை​யாக அவை​யில் பதி​ல​ளிப்​ப​தற்​காக நட்​சத்​தி​ரக் குறி​யி​டப்​பட்ட இரு​பது கேள்​வி​கள் குலுக்​கல் முறை​யில் முன்​ன​தா​கவே தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டு​கின்​றன.​ அவை​யின் விதி​மு​றைப்​படி ஓர் உறுப்​பி​ன​ருக்கு ஒரு நட்​சத்​தி​ரக் குறி​யிட்ட கேள்​விக்கு மேல் ஒரு நாளைக்​குத் தரப்​ப​டு​வ​தில்லை.​

ஒரே கேள்​வி​யைக் கேட்​ப​வர்​கள் பட்​டிய​லில் ஒன்​றுக்​கும் மேற்​பட்​ட​வர்​கள் இருந்​தால் குலுக்​கல் முறை​யில் இரு​வர் தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டு​வர்.​ அவை​யில் நேரி​டை​யா​கப் பதி​ல​ளிக்​கப்​ப​டா​மல் இரு அவை​க​ளி​லும் தனித்​த​னி​யாக ஒவ்​வொரு நாளும் இரு​நூறு கேள்​வி​க​ளுக்கு எழுத்து மூல​மா​கப் பதில் தரப்​பட்டு அவை​யின் முன் வைக்​கப்​ப​டும்.​ இந்த முறை​யால்,​​ இரு அவை​க​ளி​லும் சேர்ந்து நாள் ஒன்​றுக்கு 440 கேள்வி-​பதில்​கள் மூலம் அர​சாங்​கத்​தின் பல்​வேறு நட​வ​டிக்​கை​கள் பற்​றிய விவ​ரங்​களை நாட்டு மக்​க​ளுக்கு வெளிப்​ப​டுத்​தும் வாய்ப்பு மக்​கள் பிர​தி​நி​தி​க​ளுக்​குக் கிடைக்​கி​றது.​ ​ ​ ​

545 உறுப்​பி​னர்​க​ளை​யு​டைய மக்​க​ள​வை​யின் கேள்வி நேரத்​தில்,​​ இரு​பது கேள்​வி​க​ளுக்கு மட்​டுமே நேரடி பதில் ஒரு மணி நேரத்​தில் கிடைக்​கும் என்​ப​தால் அத்​த​கைய வாய்ப்பு மிக அரி​ய​தா​கத்​தான் ஓர் உறுப்​பி​ன​ருக்கு அமை​யும்.​ திங்​கள் முதல் வெள்ளி வரை,​​ வாரத்​தில் அமைச்​ச​ர​கத் துறை​கள் அனைத்​தும் ஐந்து பிரி​வு​க​ளா​கப் பிரிக்​கப்​ப​டு​கி​றது.​ உறுப்​பி​னர் எழுப்​பும் கேள்வி அந்த பிரச்​னைக்​கு​ரிய அமைச்​ச​ரைக் குறிப்​பிட்டு நேரி​டை​யாக அனுப்​பப்​ப​டு​கி​றது.​ கேள்​விக்​கு​ரிய நாளுக்கு ஐந்து நாள் முன்​ன​தா​க​வும்,​​ 21 நாள்​க​ளுக்​குள்​ளா​க​வும் உறுப்​பி​னர் தமது கேள்​வியை அனுப்ப வேண்​டும்.​ தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட கேள்​வி​க​ளின் விவ​ரம் அச்​சி​டப்​பட்டு உறுப்​பி​னர்​கள் அனை​வ​ருக்​கும் ஐந்​தாறு நாள்​க​ளுக்கு முன்​ன​தாக அனுப்​பப்​பட்​டு​வி​டும்.​ ​ ஆக,​​ தன்​னு​டைய கேள்வி வரும் நாளன்று குறிப்​பிட்ட உறுப்​பி​னர் அந்​தக் கேள்​விக்​கு​ரிய பிரச்​னை​க​ளைத் துணைக் கேள்​வி​கள் மூலம் கேட்​ப​தற்​கான விவ​ரங்​க​ளைச் சேக​ரித்து வைத்து,​​ குறிப்​பிட்ட அமைச்​ச​ரின் துறை நிர்​வா​கத்​தில் உள்ள குறை​பா​டு​களை வெளிப்​ப​டுத்த ஆயத்​த​மாக இருக்க வேண்​டும்.​

இந்​திய நாடா​ளு​மன்ற மக்​க​ள​வை​யில் கடந்த காலத்​தில் ​ இரு​பது கேள்​வி​க​ளில் நான்கு அல்​லது ஐந்து கேள்​வி​க​ளுக்கு மட்​டுமே பதில் பெறப்​பட்டு அதற்​குள் கேள்வி நேரம் முடிந்​து​வி​டும்.

​ இங்​கி​லாந்து மக்​க​ள​வை​யில் கேள்வி-​பதில்​கள் மிக விரை​வா​க​வும்,​​ சுருக்​க​மா​க​வும் இருக்​கும்.​ உதா​ர​ண​மாக,​​ 30-11-2009 திங்​கள்​கி​ழமை ஒரு மணி நேரத்​தில் 19 கேள்​வி​க​ளுக்​குப் பதில்​கள் தரப்​பட்​டன.​ ​ ​ ​

அதே 30-11-2009 திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற இந்​திய மக்​க​ள​வைக் கூட்​டத்​தின் கேள்வி நேரத்​தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்​தப்​பட்​டி​ருக்​கி​றது.​ அன்​றைய தினம் கேட்​கப்​ப​ட​வி​ருந்த இரு​பது கேள்​வி​க​ளுக்​குத் தொடர்​பு​டைய 38 உறுப்​பி​னர்​க​ளில் 4 பேர் மட்​டுமே வருகை தந்து தம்​மு​டைய கேள்​வி​க​ளைக் கேட்​ட​னர்.​ மீத​மி​ருந்த கேள்​வி​க​ளுக்கு உரிய 34 உறுப்​பி​னர்​கள் கேள்வி நேரத்​தில் அவை​யில் இல்​லாத கார​ணத்​தால் அரை மணி நேரத்​தில் கேள்வி நேரம் முடிவு பெற்று அவை நண்​ப​கல் 12 மணிக்கு ஒத்​தி​வைக்​கப்​பட்​டது.​ இது​வரை நடை​பெற்ற மக்​க​ள​வைக் கூட்​டங்​க​ளில் குறிப்​பிட்ட ஒரு மணி நேரத்​துக்​குள் பெரும்​பா​லான கேள்​வி​கள் பதில் தரப்​ப​டா​மல் விடப்​பட்​டி​ருக்​குமே தவிர,​​ 26 நிமி​டத்​துக்​குள் கேள்வி நேரம் முற்​றுப் பெற்​றது கிடை​யாது.​ ஒதுக்​கப்​பட்ட ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தா​கக் கேள்வி கேட்ட உறுப்​பி​னர்​கள் அவை​யில் இல்​லா​த​தால்,​​ அவை ஒத்​தி​வைக்​கப்​பட்​டது என்​பது இந்​திய நாடா​ளு​மன்ற வர​லாற்​றில் ஒரு வேத​னை​யான சாதனை ஆகும்.​ ​

கேள்​வி​கள் கேட்​டு​விட்​டுக் குறிப்​பிட்ட தரு​ணத்​தில் அவை​யில் இல்​லாத 34 பேர்​க​ளில் கட்​சி​வா​ரி​யா​கப் பார்த்​தால் ​ காங்​கி​ரஸ் ​(12),​ பா.ஜ.க.​ ​(7),​ ஜே.டி.யு.​ ​(3),​ சிவ​சேனா ​(3),​ சி.பி.எம்.​ ​(2),​ சி.பி.ஐ.​ ​(2) மற்​றும் ஓர் உறுப்​பி​னர் மட்​டும் வராத கட்​சி​கள் சமாஜ்​வாதி,​​ கே.சி.எம்.,​​ ஏ.எம்.எம்.ஐ.,​​ பிஜு ஜன​தா​தள்,​​ சுயேச்சை ஆகி​யோர் அடங்​கும்.​ ஆக,​​ ஆளுங்​கட்​சி​யி​னர் கேள்வி நேரத்​தில் அலட்​சி​ய​மாக இருப்​ப​தை​விட,​​ கேள்வி கேட்ட எதிர்க்​கட்​சி​யி​னர் பலர் மக்​க​ளுக்​குப் பணி​யாற்​றத் தமக்​குக் கிடைத்த அரிய வாய்ப்​பைப் பயன்​ப​டுத்​தத் தவ​றி​யது கண்​ட​னத்​துக்​கு​ரி​ய​தா​கும்.​ ​

மக்​க​ள​வை​யில் இப்​படி என்​றால்,​​ மாநி​லங்​க​ள​வை​யி​லும் இந்த நோய் வேக​மா​கப் பரவி வரு​கி​றது.​ 2-12-2009 அன்று மாநி​லங்​க​ள​வை​யில் கேள்வி கேட்ட 5 உறுப்​பி​னர்​கள் வர​வில்லை.​ மேலும் 8-12-2009 அன்று கேள்வி கேட்ட 7 உறுப்​பி​னர்​கள் அவை​யில் இல்​லாத கார​ணத்​தால் அந்​தக் கேள்​வி​க​ளுக்கு நேரி​டை​யான பதில்​கள் அவை​யில் தரப்​ப​ட​வில்லை.​ ​

சென்ற 14-வது மக்​க​ள​வை​யின் ஐந்​தாண்டு காலத்​தில் ​ மொத்​தம் 89,000 கேள்​வி​கள் கேட்​கப்​பட்​ட​தா​கத் தெரி​கி​றது.​ 14-வது மக்​க​ள​வை​யின் ஐந்​தாண்டு காலத்​தில் 56 உறுப்​பி​னர்​கள் எத்​த​கைய கேள்​வி​யை​யும் கேட்​க​வில்லை என்று ஓர் ஆய்​வ​றிக்கை கூறு​கி​றது.​ அவர்​க​ளில் முக்​கி​ய​மா​ன​வர்​கள் தேவ கவுடா,​​ மம்தா பானர்ஜி,​​ அஜீத் சிங்,​​ உமர் அப்​துல்லா,​​ கல்​யாண் சிங்,​​ ஜெக​தீஷ் டைட்​லர்,​​ தர்​மேந்​திரா,​​ கோவிந்தா போன்ற கட்​சித் தலை​வர்​கள் பல​ரும்,​​ திரை​யு​ல​கப் பிர​மு​கர்​க​ளும் ஒரு கேள்​வி​கூட கேட்​ட​தில்லை.​ மேலும்,​​ 67 உறுப்​பி​னர்​கள் அந்த ஐந்​தாண்டு காலத்​தில் பத்​துக் கேள்​வி​கள் அல்​லது அதற்​கும் குறை​வா​கக் கேட்​டி​ருக்​கி​றார்​கள்.​ மொத்த உறுப்​பி​னர்​க​ளில் 23 சத​வி​கி​தம் பேர் கேள்வி கேட்​கும் பழக்​கம் இல்​லா​த​வர்​க​ளாக இருந்​த​னர்.​ ​ ​

சென்ற மக்​க​ள​வை​யில் சிவ​சேனா கட்சி உறுப்​பி​னர்​கள் ஆனந்​த​ராவ் வித்​தோபா அட்​சுல் 1,255 கேள்​வி​க​ளை​யும்,​​ சிவாஜி அதல்​ராவ் பாட்​டில் 1,251 கேள்​வி​க​ளை​யும் கேட்டு முதல் இரண்டு இடங்​க​ளைப் பெற்​றி​ருந்​த​னர்.​ இதை வைத்து,​​ அகில இந்​திய அர​சிய​லில் சிவ​சேனா உறுப்​பி​னர்​க​ளுக்கு இருந்த அக்​கறை மற்ற கட்​சி​யி​ன​ருக்கு இல்​லாது போயிற்று என்று கூற முடி​யுமா?​

30-11-2009 அன்று கேள்வி கேட்டு அவைக்கு வராத உறுப்​பி​னர்​கள் பற்றி அந்​தந்​தக் கட்​சித் தலை​வர்​க​ளுக்​குக் கடி​தம் எழு​தப்​போ​வ​தாக அவைத்​த​லை​வர் மீரா குமார் அறி​வித்​துள்​ளார்.​ அவை​யின் நட​வ​டிக்​கை​க​ளுக்​காக நிமி​டம் ஒன்​றுக்கு ரூ.26,000 அர​சாங்​கப்​ப​ணம் செல​வி​டப்​ப​டு​கி​றது.​ அன்று கேள்வி கேட்டு வராத உறுப்​பி​னர்​க​ளால் அவை​யின் நட​வ​டிக்கை அரை மணி நேரம் ஒத்​திப்​போ​டப்​பட்டு வீணான செலவு ரூ.​ 7.8 லட்​சம் ஆகும்.​ இது அர​சாங்​கப்​ப​ணம் என்​றா​லும் மக்​க​ளின் வரிப்​ப​ணம்.​

நா​டா​ளு​மன்​றத்​தில் எழுப்​பப்​பட்ட கேள்​வி​யின் விளை​வா​கத்​தான் ஹரி​தாஸ் முந்த்ரா என்​ப​வ​ருக்கு இந்​திய ஆயுள் காப்​பீட்டு நிறு​வ​னத்​தி​ட​மி​ருந்து தவ​றான முறை​யில் நிதி​யு​தவி அளிக்​கப்​பட்​ட​தென்று உறுப்​பி​னர் பெரோஸ் காந்தி ​(இந்​திரா காந்​தி​யின் கண​வர்)​ 1958-ல் மக்​க​ள​வை​யில் தீர்​மா​னம் கொண்​டு​வந்​த​தன் பேரில்,​​ பம்​பாய் உயர் நீதி​மன்​றத்​தின் தலைமை நீதி​பதி எம்.சி.சாக்லா தலை​மை​யில் விசா​ர​ணைக் குழு அமைக்​கப்​பட்​டது.​ அக்​குழு அளித்த அறிக்​கை​யின்​படி காங்​கி​ரஸ் கட்​சி​யின் தேர்​தல் நிதிக்கு முந்த்ரா உத​வி​யி​ருப்​ப​தா​க​வும்,​​ அதன்​பே​ரில்,​​ அவ​ரு​டைய பங்​கு​களை மிக அதி​க​மான விலைக்கு வாங்க நிதி​ய​மைச்​சர் டி.டி.கிருஷ்​ண​மாச்​சாரி உத்​த​ர​வின்​படி இந்​திய ஆயுள் காப்​பீட்டு நிறு​வ​னம் முன்​வந்​த​தும் தெரி​ய​வந்​தது.​ இது,​​ அர​சாங்க அதி​கா​ரத்தை தவ​றா​கப் பயன்​ப​டுத்​திய ஊழல் விவ​கா​ரம் என்று சாக்லா குழு தீர்​மா​னித்​தது.​ அதன் பிறகு,​​ நிதி​ய​மைச்​சர் டி.டி.கிருஷ்​ண​மாச்​சாரி பத​வியி​லி​ருந்து வெளி​யே​றி​னார்.​

1973 ஆகஸ்டு 15-ல் கல்​வி​ய​மைச்​சர் நூருல் ஹாசன் முயற்​சி​யால் சுதந்​திர இந்​தி​யா​வின் முதல் 25 ஆண்​டு​கள் பற்​றிய ஒரு வர​லாற்​றைத் தொகுத்து காலப்​பெட்​ட​கத்​தில் வைத்து தில்லி செங்​கோட்டை அரு​கில் ஆழப் புதைத்​தார்​கள்.​ விஞ்​ஞான முறை​யால் அப்​பெட்​ட​கத்தை ஐயா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்​குப்​பின் வரு​ப​வர்​க​ளால் தாம் திறந்து பார்க்க முடி​யும் என்று கூறப்​பட்​டது.​ ஆயி​னும்,​​ பெட்​ட​கத்​தில் வைக்​கப்​பட்ட வர​லாற்​றில் பல தவ​றான,​​ தாறு​மா​றான விவ​ரங்​கள் இருப்​ப​தாக ஒரு கேள்வி 1973 நவம்​ப​ரில் மக்​க​ள​வை​யில் வந்​தது.​ அதற்கு,​​ பெட்​ட​கத்​தி​லுள்ள வர​லாறு மிக​வும் ரக​சி​ய​மா​னது,​​ அது ஐயா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்​குப் பிற​கு​தான் பார்க்​கப்​பட வேண்​டும் என்று கல்​வி​ய​மைச்​சர் பதி​ல​ளித்​தார்.​ ​

ஆ​யி​னும்,​​ 1977 மார்ச்​சில் ​ மொரார்ஜி தேசாய் தலை​மை​யில் ஜனதா அர​சாங்​கம் அமைந்​த​தும்,​​ அந்​தக் காலப்​பெட்​ட​கம் தோண்​டி​யெ​டுக்​கப்​பட்டு,​​ அதி​லி​ருந்த வர​லாற்​றுக் குறிப்​பு​கள் தவ​றா​னவை என்று நிரூ​ப​ண​மா​னது.​ இதில் எனக்​கும் பங்கு உண்டு.​

சி​று​பொறி,​​ பெரும் தீயாக மாறக்​கூ​டும்.​ அதைப்​போல்,​​ ஒரு சிறிய கேள்வி பெரிய வர​லாற்​றுத் திருப்​பத்தை உண்​டாக்​கக்​கூ​டும்.​ ஆக,​​ கேள்வி நேரத்தை எந்த வகை​யி​லும் ஒதுக்கி வைப்​பது அல்​லது அலட்​சி​யம் செய்​வது,​​ நாட்டு மக்​க​ளுக்​கும்,​​ நாடா​ளு​மன்​றத்​துக்​கும் இழைக்​கப்​ப​டும் மாபெ​ரும் துரோ​க​மா​கும்.​
கட்டுரையாளர் : இரா.செழி​யன்
நன்றி : தினமணி

மும்பை தாக்குதல் : தாஜ் ஹோட்டலுக்கு ரூ.114 கோடி இழப்பு

மும்பை தாக்குதல் காரணமாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான தாஜ் ஹோட்டலுக்கு ரூ.114 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த தாஜ் ஹோட்டல் பொது மேலாளர் வித்யாதர் வைத்யா, இது திட்டவட்டமான இழப்பு தொகை இல்லை எனவும், இன்னும் இழப்பின் மதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இழப்பை ஆய்வு செய்து, சரி செய்ய டாடா குரூப்ஸ் நிறுவனத்தின் ஹோட்டல் துறை முன்வந்துள்ளது. தாஜ் ஹோட்டலின் 6 வது மாடியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான தாஜ் நினைவுச் சின்னம் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தாஜ் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் 12வது மாடியில் உள்ள தாஜ் மஹால் மாதிரி வடிவம், 2 உணவகங்கள் ஆகியனவும் சேதமடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்