Saturday, December 12, 2009

வாய்​மூடி மெüனி​க​ளாக...

கட​லை​வி​டப் பெரிது "கருணை' மனம் ​ என்​பர்.​ இந்த அவ​சர உல​கில் சுய​ந​லம்,​​ லாப நோக்கு,​​ நமக்​கென்ன வந்​தது என்ற ஒரு​மு​கச் சிந்​தனை...​ போன்​றவை நாலா​பக்​க​மும் பர​விக் கிடப்​பதை நாம் கவ​லை​யு​டன் உற்​று​நோக்க வேண்​டி​யுள்​ளது.​

ந​வ​நா​க​ரி​கச் சிந்​த​னை​யில் சிக்​கி​யுள்ள இன்​றைய மனி​தர்​கள் பலர்,​​ தங்​கள் கண்​முன் நடக்​கும் எந்​தச் சம்​ப​வங்​க​ளை​யும் கண்​டு​கொள்​வ​தா​கத் தெரி​ய​வில்லை.​ "நமக்​கேன் வம்பு' என்ற மனப்​பான்​மை​யில் அவ​ர​வர் வேலை​யைப் பார்த்​து​விட்​டுச் செல்​லும் வழக்​கம் இன்​றைய சூழ​லில் அதி​க​ரித்து வரு​கி​றது.​

தள்​ளாத வய​தி​லும்,​​ முக்​கி​யப் பணி நிமித்​த​மாக அவ​ச​ர​மா​கப் பஸ்​ஸில் ஏறும் வயோ​தி​கர்​கள்​கூட சிறப்​புக் கட்​டண பஸ்ஸô,​​ எல்.எஸ்.எஸ்.​ பஸ்ஸô,​​ சாதா​ரண பஸ்ஸô என பார்த்​துத்​தான் ஏற​வேண்​டும் என்று நடத்​து​நர்​கள்,​​ ஓட்​டு​நர்​கள் நினைக்​கின்​ற​னர்.​
அப்​ப​டியே ஒரு​வர் அவ​ச​ரத்​தில் பஸ்​ஸில் ஏறி​விட்​டால் அந்​தப் பய​ணிக்கு ஒரு​சில நடத்​து​நர்​க​ளால் கொடுக்​கப்​ப​டும் "அர்ச்​சனை' சொல்​லில் அடங்​காது.​ அந்​தப் ​ பய​ணி​யைக் குறிப்​பிட்ட பஸ் நிறுத்​தத்​தில் இறக்​கி​வி​டு​வ​தற்​குப் பதி​லாக வேறொரு நிறுத்​தத்​தில் வேண்​டு​மென்றே இறக்​கி​வி​டும் செயல்​க​ளை​யும் நாம் பார்க்க முடி​கி​றது.​
ஒரு பய​ணிக்கு இப்​படி நேர்ந்​து​விட்​டதே என நினைத்​துத் திரைப்​ப​டங்​க​ளில் வேண்​டு​மா​னால் "ஹீரோ' தட்​டிக்​கேட்​பதை ஆவ​லோடு நாம் எதிர்​பார்ப்​போம்;​ ஏற்​றுக்​கொள்​வோம்.​ ஆனால்,​​ இது​போன்ற உண்​மைக் காட்​சியை பஸ்​ஸில் நேர​டி​யா​கப் ​ பார்க்​கும் பய​ணி​க​ளில் ஒரு​வ​ருக்​குக்​கூ​டத் தட்​டிக்​கேட்​கும் மனப்​பான்மை இல்​லா​மல் வாய்​மூடி மெüனி​க​ளா​கி​வி​டு​கின்​ற​னர்.​

ப​ய​ணி​க​ளி​டம் அன்​பும்,​​ பரி​வும் காட்​டு​வேன் என அவர்​கள் ​(ஓட்​டு​நர்,​​ நடத்​து​நர்)​ பணி​யில் சேர்ந்​த​போது எடுத்​துக்​கொண்ட உறு​தி​மொழி எங்கே போனது?​

"வரு​மா​னம் ஈட்​டி​வந்த குடும்​பத் தலை​வர் திடீ​ரென மர​ண​ம​டைய நேரி​டு​கி​றது.​ 3 பெண் குழந்​தை​களை வைத்​துக்​கொண்டு 35 வயதே ஆன அவ​ரது மனைவி,​​ அர​சின் சமூ​க​ந​லப் பாது​காப்​புத் திட்​டத்​தில் உத​வித் தொகைக்​காக விண்​ணப்​பித்து காத்​துக்​கி​டக்​கி​றார்.​

அ​வ​ருக்​குச் சம்​பந்​தப்​பட்ட தாலுகா அலு​வ​ல​கத்​தில் இருந்து அழைப்பு வரு​கி​றது.​ உங்​க​ளுக்​கான உத​வித்​தொகை ரூ.10,000}க்கான காசோலை தயா​ராக உள்​ளது.​ ரூ.3 ஆயி​ரம் லஞ்​சம் கொடுத்​தால் காசோ​லை​யைப் பெற்​றுக்​கொள்​ள​லாம் என அரசு ஊழி​யர் ஒரு​வர் அந்த பெண்​ணி​டம் "பேரம்' பேசு​கி​றார்.​ அந்​தப் பெண்​மணி லஞ்ச ஒழிப்பு போலீ​ஸô​ரை​நாடி தனது உரி​மை​யைப் ​(உத​வித்​தொ​கையை)​ பெற்​றுக்​கொண்​டார்' என்று பத்​தி​ரி​கைச் செய்தி தெரி​விக்​கி​றது.​

இச்​சம்​ப​வத்​தில்,​​ வாழ​வேண்​டிய வய​தில் கண​வனை இழந்து,​​ 3 பெண் குழந்​தை​களை வைத்​துக்​கொண்டு சமு​தா​யத்​தில் போராட வேண்​டிய பெண்​ணுக்கு,​​ ஆறு​த​லாக அரசு அளிக்​கும் உத​வித்​தொ​கைக்​கு​கூட ஈவு​இ​ரக்​கமே இல்​லா​மல் லஞ்​சம் கேட்​கும் அதி​கா​ரி​யின் மனப்​போக்கை நாம் என்​ன​வென்று சொல்​வது!​
க​ண​வனை இழந்து மனம் நொந்து தவிக்​கும் இது​போன்ற ஒரு பெண்​ணி​டம் இத​யமே இல்​லா​மல் கொள்​ளை​ய​டிக்​கும் இது​போன்ற ஒரு​சில அதி​கா​ரி​க​ளின் "ஈர​மில்லா' எண்​ணங்​களை எப்​படி,​​ யாரால் மாற்​று​வது?​

அண்​மை​யில் மது​ரை​யில் நடந்த சம்​ப​வம் இது }​ ஒரு இளம் போலீஸ்​கா​ரர் மனைவி ஒரு​வர் தீயிட்​டுத் தற்​கொ​லைக்கு முயன்​றுள்​ளார்.​ அவ​ரைக் காப்​பாற்​றச் சென்​ற​போது அந்த போலீஸ்​கா​ர​ரும் தீக்​கா​ய​ம​டைந்​தார்.​
இரு​வ​ருமே ஒரு பிர​பல மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​ட​னர்.​ 30 சத​வி​கி​தமே தீக்​கா​ய​ம​டைந்த அந்​தப் பெண்,​​ சுமார் 50 தினங்​கள் வரை அந்த மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்​சை​யில் இருந்து உயி​ரி​ழந்​தார்.​ இதில்,​​ மன​தைப் பத​ற​வைக்​கும் விஷ​யம் என்​ன​வென்​றால்,​​ மருந்து,​​ மாத்​திரை,​​ சிகிச்​சைக்​கான கட்​ட​ணங்​கள் முழு​வ​தை​யும் வசூல் செய்த பின்​னரே அந்​தப் பெண் உயி​ரி​ழந்​து​விட்​ட​தாக உற​ வி​னர்​க​ளுக்​குத் தெரி​விக்​கப்​பட்​டது.​

ம​னி​த​நே​ய​மற்ற இது​போன்ற செயல் இப்​பூ​வு​ல​கில் வேறெங்​கும் நடக்​குமா என்​பதை நாம் கற்​பனை செய்​து​கூ​டப் பார்க்க முடி​ய​வில்லை.​
மர​ணப் படுக்​கை​யில் உள்ள மனித உயிர்​க​ளுக்கு விலை வைத்து,​​ பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தி​ன​ருக்கு உலை​யும் வைத்து பணம் சம்​பாத்​தி​யமே ஒரே குறிக்​கோள் என்ற நோக்​கத்​தில் பய​ணிக்​கும் ஒரு​சில மருத்​து​வ​ம​னை​க​ளின் போக்​கால் ஏற்​ப​டும் விப​ரீ​தத்தை நாம் நினைத்​துப் பார்க்​கக்​கூட முடி​ய​வில்லை.​

பார்ப்​ப​தற்கே அரு​வெ​றுப்​பான தோற்​றத்​து​டன்,​​ ஈ மொய்க்​கும் நிலை​யில் இருந்த தொழு​நோ​யா​ளி​க​ளை​யும் தனது கரு​ணைக் கண்​ணால் உற்​று​நோக்கி,​​ அவர்​க​ளி​டத்​தில் மனதை மட்​டும் ​ பார்த்​துப் பேசி,​​ அர​வ​ணைத்து,​​ தாய்மை போற்​றிய அன்னை தெரஸô வாழ்ந்​த​தும் இப்​பூ​வு​ல​கில்​தானே.​

க​ட​வு​ளுக்கு இணை​யாக மதிக்​கப்​ப​டும் மருத்​துவ உல​கமே இப்​ப​டித் திசை​மா​றிச் செல்​லத் தொடங்​கி​யுள்ள இந்த பேரா​பத்து எங்கு போய் முடி​யும்?​

து​ளி​யும் கரு​ணை​யில்​லாத கல் நெஞ்​சக்​கா​ரர்​க​ளின் இது போன்ற தவ​று​கள்,​​ சமு​தா​யத்​தில் எதிர்​வி​ளை​வு​களை ஏற்​ப​டுத்​தும் என்​பது சமூக ஆர்​வ​லர்​க​ளின் கவலை.​

எ​னவே,​​ இது​போன்ற மனி​தர்​க​ளின் தவ​று​கள் உரிய நேரத்​தில் தண்​டிக்​கப்​ப​ட​வேண்​டும்.​ ஆனால்,​​ பண​ப​லம்,​​ அதி​கா​ர​ப​லம் உள்​ளிட்​ட​வற்​றால் அவர்​கள் காப்​பற்​றப்​பட்​டு​வி​டு​வது சமு​தா​யத்​தின் சாபக்​கேடே.​

இ​த​னால்,​​ கோபம் கொள்​ளும் சமூக அக்​க​றை​யுள்ள சிந்​த​னை​யா​ளர்​கள் கிளர்ந்​தெழ வேண்​டிய சூழ்​நிலை உரு​வா​கும்.​ இது​போன்ற கிளர்ச்​சி​களை ஆரம்​பத்​தி​லேயே தடுக்க ஆட்​சி​யா​ளர்​கள் முன்​வ​ர​வேண்​டும்.​ இல்​லை​யென்​றால் வழக்​கம்​போல் "தும்பை விட்டு வாலைப் பிடித்த' கதை​யா​கி​வி​டும்.
கட்டுரையாளர் : கொ.காளீஸ்​வ​ரன்
நன்றி : தினமணி

No comments: