Tuesday, October 20, 2009

பாதுகாப்பான டிரைவிங் பிரிமியம் ரேட் குறையும்

இன்சூரன்ஸ் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களால், பல ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, தற்போது கார் இன்சூரன்சில் பல பயன்கள் உள்ளன. பாதுகாப்பாக, வாகனங்கள் ஓட்டுபவர்கள், சில ஆதாயங்கள் பெறும் வகையில், ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு, புதிய திட்டம் ஒன்றை சோதனை திட்டமாக துவங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, காரில், டிராக்கிங் கருவி ஒன்று பொருத்தப்படும். அந்த கருவி, காரின் வேகம், 60 கி.மீ.,க்கு மேல் செல்கிறதா, போக்குவரத்து விதிகள் மீறப்படுகிறதா மற்றும் இரவு 10 மணிக்கு மேல் கார் ஓட்டப்படுகிறதா என்பதை கண்டறியும். இதன் மூலம் காரின் பயன்பாடு கண்டறியப்படும்.
முன், 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட, டிராக்கிங் கருவியின் தற்போதைய விலை ஐந்தாயிரம் ரூபாய். வாடிக்கையாளர்கள் தங்கள் கார் பயன்பாடு குறித்து, அறிய விருப்பம் தெரிவிக்க வேண்டும். அதுவே இந்த கருவி பொருத்துவதில் இருக்கும் ஒரே பிரச்னை.
இதுகுறித்து ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,'டிராக்கிங் கருவி மூலம் சேகரிக்கப்படும், விஷயங்கள் பிரீமியம் கணக்கிடுவதற்கே பயன்படுத்தப்படும். இந்த கருவி, இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற உள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: