அக்டோபர் 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 0.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடைசியாக 0.7 சதவீதமாக இருந்தது. காய்கறிகள், பால், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களில் விலை குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் 13.34 சதவீதம் அதிகமாக இருந்த அத்தியாவசிய பொருட்களின் விலை, இந்தாண்டு இந்த வார கணக்கெடுப்பு படி 1.67 சதவீதம் குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பணவீக்கம் இந்த வாரம் அதிகரித்து இருந்தாலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 11.49 சதவீதமாக இருந்தது. இதனால் அக்டோபர் 3ம் தேதியுடன் முடிந்த பணவீக்கம் அதிகமான உயர்வு என்று கூறமுடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், பணவீக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு(பி.எம்.இ.ஏ.சி.,) தலைவர் ரெங்கராஜன் இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment