Sunday, August 23, 2009

மொபைல் போன் புழக்கத்தில் ஏறுமுகம்: பதட்டத்தை ஏற்படுத்தும் 'காயின் பூத்'

மொபைல் போன் பயன்பாட்டில் ஏறுமுகம் அடைந்து வரும் நிலையில், பதட்டத்தை ஏற்படுத்தி வரும் 'காயின் பூத்'களை தடை செய்யும் அவசியம் தற்போது எழுந்துள்ளது. தந்தி அடித்து தகவல் அறிந்த காலம் மாறி, எழுந்ததில் இருந்து தூங்குவது வரை 'லைவ் கமெண்ட்' கொடுக்கும் மொபைல் போன்கள் யுகம் தற்போது உள்ளது. மொபைல் போன் சேவையில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு சலுகைகளை அள்ளி வீசுகின்றனர். 10 காசுக்கு கூட ஒரு 'கால்' செய்யும் அளவுக்கு தொலை தொடர்பு விரிவடைந்துள்ளது.
கூலி தொழிலாளி முதல் குபரேர் வரை மொபைல் போன் சேவை பயன்பாடு கட்டாயமாக மாறிவிட்டது. காயின் பாக்ஸ் போன்களால் தான் பல குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி போடப்படுகிறது. நவீனத்தின் வளர்ச்சியால் இது போன்ற வசதி இருந்தாலும், 'காயின் பூத்' போன்கள் மூலம் ஏகப்பட்ட பிரச்னைகளை பலரும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு இதனால் பாதிப்பு அதிகம். ஆபாச வார்த்தைகள், மிரட்டல், சர்ச்சை போன்றவை காயின் பூத் போன்கள் மூலமே வருவதாக சமீபத்திய போலீஸ் அறிக்கைகள் கூறுகின்றன. அதே மொபைல் போனாக இருக்கும் பட்சத்தில் அந்த நபரை எளிதில் அடையாளம் காணலாம்.
காயின் பூத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை கண்டறிவதிலும் நடைமுறை சிக்கல் நிறைய உள்ளது. சுற்றி வளைத்து விசாரிக்கையில் வேறு வழியின்றி காயின் பூத் உரிமையாளர்கள் தான் போலீசிடம் பிடிபடுகிறார்கள். போன் செய்ய வரும் அனைவரிடமும் விபரங்களை பெறுவது என்பது எளிதல்ல. போன் அருகே கேமராக்களை பொருத்தலாம் என்றால் பலரது வருமானம் அதற்கு ஏற்றதாக இருக்காது. காயின் போன் மூலம் பலருக்கு பயன் இருப்பினும், பெரும்பாலானோருக்கு பாதிப்பே ஏற்படுவதை எண்ணிபார்க்க வேண்டும். இந்த போனை பயன்படுத்துவோர் மூலம் ஏற்படும் விபரீதத்தை தடுக்க அவர்களை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
நன்றி : தினமலர்


2 comments:

Earn Staying Home said...

நல்ல சிந்தனை

பாரதி said...

Earn Staying Home thanks