Monday, August 24, 2009

சேமிப்பு கணக்குகள் குறித்த ரகசியங்களை வெளியிட முடியாது : ஸ்விஸ் வங்கி திட்டவட்டம்

சேமிப்பு கணக்குகள் குறித்த ரகசியங்களை வெளியிடமுடியாது என இந்தியாவுக்கு ஸ்விஸ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஸ்விஸ் வங்கியில் ஏராளமாக கருப்ப பணத்தை இந்தயிவை சேர்ந்த பெரும் புள்ளிகள் பதுக்கி வைத்திருப்பதாக இந்திய அரசியல் கட்சிகள் குறிப்பாக பா.ஜ., சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் ஆரம்பத்தில் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறித்த விபரங்களையும், கணக்கு விபரங்களையும் வெளியிட தயாராக இருப்பதாக ஸ்விஸ் வங்கி பரபரப்பு தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது கணக்குகளை வெளியிட முடியாது என அந்தர் பல்டி அடித்துவிட்டது. ஸ்விஸ் நாட்டு சட்டத்தின் படி இப்படி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறித்த விபரங்களை வெளியிடுவது அத்துமீறல் என தெரிவித்துள்ளது அந்நாடு. மேலும் இந்தியா சர்வ சாதாரணமாக அவர்கள் நாட்டில் உள்ள சில பிரபல‌ங்களின் பட்டியலை கொடுத்து இவர்களில் யாருக்கெல்லாம் ஸ்விஸ் வங்கியில் அக்கவுண்ட் இரு‌க்கிறது என கேட்டால் அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் வங்கிக்கு இல்லை. அண்மையில் பார்லிமென்ட்டில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‌உரையாற்றுகையில் : ஸ்விஸ் வங்கியில் முடங்கி கிடக்கும் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ள ஸ்விஸ் வங்கி அமெரிக்காவுக்கு இதே விவகாரத்தில் சலுகை அளித்துள்ளது. அமெரிக்காவும் - ஸ்விஸ் வங்கி - யு.பி.எஸ்., ஏ.ஜி., யுடன் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின் படி அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 4,450 பேரது அக்கவுண்ட் டீடெய்லகளை அளித்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: