Thursday, August 20, 2009

உலகின் சக்தி வாய்ந்த 20 பெண்மணிகளில் ஒருவராக சந்தா கோச்சார் தேர்வு

உலகின் சக்தி வாய்ந்த 20‌ பெண்மணிகளுள் ஒருவராக ஐ.சி.சி., வங்கியின் சி.இ.ஓ., மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகில் அதிக செல்வாக்கான பெண்மணிகள் லிஸ்ட்டை கடந்த நான்கு வருடங்களாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிசினஸ் பத்திரிக்கை போர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்த வருட லிஸ்ட், புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் அதிக செல்வாக்கான பெண்கள் வரிசையில் முதல் இடத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கல் வந்திருக்கிறார். அதற்கு அடுத்ததாக, அமெரிக்க வங்கிகளை இன்சூர் செய்திருக்கும் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷனின் சேர்மன் ஷீலா பேய்ர் வந்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் பெப்சி கம்பெனியின் தலைமை நிர்வாகி இந்திரா நூயி ‌பிடித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா 12வது இடத்தையும், சந்தா கோச்சார் 20வது இடத்தையும் பிடித்துள்ளனர். சந்தா கோச்சர் ஐ.சி.ஐ.சி. ஐ, வங்கியின் முதல் பெண் சி.இ.ஓ., என்பது குறிப்பிடத்தக்கது. செலக்ஷன் குறித்து தெரிவித்த போர்ப்ஸ் பத்திரிகை, சக்திவாய்ந்த பெண்மணிகளை அவர்களது பாப்புலாரிட்டி வைத்து மட்டும் தேர்வு செய்வதில்லை, அவர்களின் ஆளுமை திறன் மற்றும் அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் அளவு அல்லது அவர்கள் தலைமை வகிக்கும் நாடு எவ்வளவு பெரியது என்பதை பொறுத்து தான் தேர்வு செய்யப்படுகிறார்கள் என தெரிவித்தது.
நன்றி : தினமலர்