Thursday, August 20, 2009

ஆஸ்பைர் லேர்னிங் நிறுவனம் டையர் 2 மற்றும் டையர் 3 ஏரியாக்களில் தடம் பதிக்கிறது

ஆங்கிலம் கற்றால் வாழ்க்கையில் பிளஸ் தான் என்ற நிலை நீடிக்கிறது. இந்த துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து கொண்டுள்ள ஆஸ்பைர் லேர்னிங் கம்பெனி, ஆங்கில புலமையை பரப்ப, பயிற்றுவிக்க பிரான்சைசீக்களை தேடி வருகிறது. இந்த துறையில் பரிச்சயமும், ஆர்வமும் கொண்டவர்கள் வரவேற்கப்படுகின்றனர். டையர் 2 மற்றும் டையர் 3 ஏரியாக்களுக்கான பிரான்சைசீக்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்பைர் லேர்னிங் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் கூறுகையில் : தற்போதைய சூழல் ஆங்கிலம் கற்பது என்பது ஆப்ஷனல் கிடையாது, அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. இந்நிலையில் எல்லா மாணவர்களும் சோபிக்க எளிய முறையில் ஆங்கிலம் கற்க உதவுகிறது ஆஸ்பைர். 12 முதல் 17 வுயது வரை இருக்கும் மாணவர்கள் தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும், 5 முதல் 6 ஏரியா பிரான்சைசீக்களும் தே‌வை இது தான் எங்கள் டார்கெட். என அவர் தெரிவித்தார். ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளித்தாலும், ஆங்கிலம் தவிர வேறு துறைகளிலும் ஆஸ்பைர் பயிற்சி அளித்து வருகிறது. கணக்கு, அறிவியல், தேர்வுகளுக்கு தயாரகும் முறை, ஆகியனவற்றிலும் ஆஸ்பைர் பயிற்சியளிக்கிறது. ஐ.ஐ.டி., அனைத்து இந்திய இன்ஜினியரிங் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும் பயிற்சி அளித்து வருகிறது. ஆங்கிலத்தை‌ எளிமையான முறையில் கற்றுக் கொண்டு, சரளமாக பேசவும், சரியாக எழுதவும் கற்றுத் தருவதே ஆஸ்பைரின் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்

No comments: