Friday, March 27, 2009

ஏர் இந்தியாவின் கோடை கால சிறப்பு கட்டணம் அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனம், இன்று முதல் அமலுக்கு வரும் வகையிலான கோடை கால சிறப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை: நாட்டில் உள்ள 148 இடங்களுக்கான கோடை கால சிறப்பு கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மும்பை-கோவா, சென்னை-ஐதராபாத், மும்பை-ஐதராபாத் நகரங்களுக்கு செல்ல 1,891 ரூபாய்; மும்பை-கோழிக்கோடு இடையே செல்ல 2,276 ரூபாய்; மும்பையில் இருந்து சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், டில்லிக்கும்; டில்லியில் இருந்து கோல் கட்டா, ஐதராபாத்துக்கும் பயணம் செய்ய 2,611 ரூபாய்; சென்னையில் இருந்து கோல்கட்டா, டில்லிக்கும்; டில்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் 2,901 ரூபாய். இக்கட்டணம் பயணிகள் சேவை கட்டணம் உள்ளடக்கியது. அறிவிக்கப்பட்டுள்ள கோடை கால சிறப்பு கட்டணத்தை பயன்படுத்த விரும்புபவர்கள் டிக்கெட்டுகளை 30 நாட்களுக்கு முன்பாக பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த டிக்கெட் கட்டணம் திரும்ப பெற முடியாதது. வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: