Friday, March 27, 2009

200 ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறது கூகிள்

கூகிள் நிறுவனம், அதன் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் வேலைபார்ப்பவர்களில் 200 பேரை வேலையில் இருந்து நீக்குகிறது. அந்த துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருப்ப தாகவும், அதனையடுத்து இப்போது ஆட்குறைப்பு செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜனவரி மாதத்தில் அதன் விளம்பர வருமானம் பெருமளவு குறைந்து போனதை அடுத்து, செலவை குறைக்கும் நடவடிக்கையில் அது ஈடுபட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதத்தில் 100 பேரை வேலையில் இருந்து நீக்கியது. பிப்ரவரியில் 40 பேரை நீக்கியது. கம்பெனியின் வளர்ச்சி திட்டங்களுக்காக அதிக அளவில் முதலீடு செய்து, எதிர்பார்த்த வளர்ச்சியை அடைய முடியவில்லை. எனவே அதிலிருந்து விலகி விடுவதுதான் நல்லது என்றார் கூகிளின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( குளோபல் சேல்ஸ் அண்ட் பிசினஸ் டெவலப்மென்ட் ) ஓமிட் கோர்தஸ்தானி. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் கூகிள் நிறுவனத்தில் 21,000 பேர் வேலை செய்கிறார்கள். அமெரிக்காவில் நம்பர் ஒன் இன்டர்நெட் சர்ச் இஞ்சின் கூகிள்தான். அதற்கு அங்கு 63 சதவீத மார்க்கெட் ஷேர் இருக்கிறது. 2008 ம் ஆண்டு கூகிளுக்கு கிடைத்த மொத்த வருமானம் 21.8 பில்லியன் டாலரில் 97 சதவீத வருமானம் விளம்பரம் மூலமாக வந்ததுதான்.
நன்றி : தினமலர்


No comments: