Monday, November 24, 2008

அமெரிக்க பங்கு சந்தை வீழச்சியால் இந்திய கம்பெனிகள் இழந்தது 5.74 பில்லியன் டாலர்கள்

போன வாரத்தில் அமெரிக்க சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் அங்குள்ள பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. அங்குள்ள பங்கு சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான கம்பெனிகளில் பங்கு மதிப்பு பாதாளத்திற்கு சென்று விட்டன. இதில் இந்திய கம்பெனிகளும் தப்பவில்லை. அங்குள்ள நியுயார்க் ஸ்டாக் எக்சேஞ் மற்றும் நாஸ்டாக்கில் 18 இந்திய கம்பெனிகள் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன. நவம்பர் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அங்கு லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் 18 இந்திய கம்பெனிகளில் 16 கம்பெனிகள் மொத்தமாக 5.74 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கின்றன. இரண்டு கம்பெனிகளின் மதிப்பு மட்டுமே உயர்ந்திருக்கிறது. டாக்டர் ரெட்டி'ஸ் லேபரட்டரீஸ் 37 மில்லியன் டாலர்களும், ஜென்பேக்ட் 4.3 மில்லியன் டாலர்களும் உயர்ந்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது மோசமான நிலைக்கு சென்று விட்டது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இதனால்தான் அங்குள்ள பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவை வருகின்றன. நஷ்டமடைந்த 16 இந்திய கம்பெனிகளில் அதிகம் நஷ்டமடைந்தது ஹெச்.டி.எப்.சி.பேங்க் தான். அது மட்டுமே 1.37 பில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ பேங்க் 1.12 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. இன்போசிஸ் ஒரு மில்லியன் டாலர்கள், விப்ரோ 863 மில்லியன் டாலர்கள், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 457 மில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேபிடலைசேஷனை இழந்திருக்கின்றன. இது தவிர டாடா மோட்டார்ஸ், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், ஷிபி டெக்னாலஜிஸ், ரிடிஃப் டாட் காம், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், எம்.டி.எல்.எல்., பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் ஆகியவையும் பெருமளவு மார்க்கெட் கேபிடலைஷேசனை இழந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


No comments: