Wednesday, November 26, 2008

அவுட்சோர்ஸிங் வேலைகளுக்கு இந்தியாதான் இன்னமும் முதலிடத்தில் இருக்கிறது

அவுட்சோர்ஸிங்/ ஆஃப்ஸோரிங் வேலைகளுக்கு உலகிலேயே இன்னமும் இந்தியாதான் சிறந்த இடமாக இருக்கிறது என்று டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் ( டி அண்ட் பி ) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. குறைவான சம்பளம் என்பதால் மட்டுமில்லாமல், மற்ற நாடுகளை விட இந்திய நிறுவனங்கள் இந்த துறையில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பதால் அவர்களால் சிறந்த சேவை அளிக்க முடிகிறது என்பதால்தான் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 'இந்தியாவின் மிகப்பெரிய ஐடிஇஎஸ் மற்றும் பிபிஓ கம்பெனிகள் 2008' என்ற வெளியீட்டின் நான்காவது பதிப்பை வெளியிட்ட டி அண்ட் பி நிறுவனம், சீனா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, மலேஷியா, பிரேசில், செக் குடியரசு, சிலி ஆகிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவில் தான் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை கிடைக்கிறது என்று சொல்லியிருக்கிறது. ஐடிஇஎஸ்/பிபிஓ க்கான சம்பள விஷயத்தில், இந்தியாதான் இரண்டாவது குறைந்த சம்பளம் கேட்கும் நாடாக இருக்கிறது என்கிறது. சீனாதானா உலகிலேயே குறைந்த சம்பளத்தில் ஐடிஇஎஸ்/பிபிஓ வேலைகளை செய்து கொடுக்கும் நாடாக இருக்கிறது. சீனாவில் சம்பளம் 7,00 - 8,000 டாலராக இருக்கிறது. இந்தியாவிலோ அது 7,500 - 8,500 டாலராக இருக்கிறது. பிலிப்பைன்ஸ் இல் சம்பளம் 9,000 - 10,000 டாலராக இருந்தாலும் அங்கு மற்ற நாடுகளை விட டெக்னிக்கல் பட்டதாரிகள் அதிகம் இருப்பதாக சொல்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு, இங்கு இங்கிலீஷ் பேசும் இஞ்சினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட் பட்டதாரிகள் அதிகம் இருப்பதால்தானாம். இதனால்தான் இந்திய நிறுவனங்களால் இந்த துறையில் நல்ல சேவை அளிக்க முடிகிறது என்கிறது டி அண்ட் பி.
நன்றி : தினமலர்


No comments: