Wednesday, November 26, 2008

அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்ய இன்னும் ஒரு 800 பில்லியன் டாலர்களை கொடுக்கிறது அமெரிக்க அரசு

சீரழிந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை சரி செய்ய இன்னும் ஒரு 800 பில்லியன் டாலர்களை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடனாக கொடுக்க முன்வந்திருக்கிறது. ஏற்கனவே 700 பில்லியன் டாலர்கள் போக இது இரண்டாவது கடன் திட்டம். இது குறித்து பேசிய அமெரிக்க நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், இதன் மூலம் மக்கள், அவர்களுக்கு வேண்டிய கடன்களை மீண்டும்எளிதாக பெற வாய்ப்பு ஏற்படும் என்றார். இதில் 600 பில்லியன் டாலர்களை அடமான கடன்களை ஏற்றுக்கொள்வதற்காகவும், 200 பில்லியன் டாலர்களை கன்சூமர் கிரிடிட் மார்க்கெட்டை எளிதாக்கி விடுவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என்றார் பால்சல். பொருளாதாரம் சீர்குழைந்திருப்பதால் நிதி நிறுவனங்கள், கடன் கொடுப்பதற்கு தயக்கம் காட்டி வந்தன. அது மேலும் மோசமாக மோசமாக கடன் கொடுப்பது இன்னும் கடினமானது. அக்டோபர் மாதத்தில் அங்கு கிரிடிட் கார்டு லோன், கார் லோன், மாணவர்களுக்கான கல்வி கடன் போன்றவைகள் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டன. இப்போது அறிவித்திருக்கும் கடன் திட்டத்தால் நிறுத்தி வைத்திருக்கும் கடன்கள் மீண்டும் கொடுக்கப்படும் என்றார் பால்சன். அமெரிக்க வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டின் ' மொத்த உள்நாட்டு உற்பத்தி' ( ஜி.டி.பி ) மூன்றாவது காலாண்டில் 0.5 சதவீதமாக குறைந்திருப்பதாக தெரிவித்திருந்தது. மக்களின் வாங்கும் சக்தியும் கடந்த 28 வருடங்களில் இல்லாத அளவாக குறைந்து விட்டதாக தெரிவித்திருந்தது. இதனால்தான் அவசரமாக 800 பில்லியன் கடன் திட்டத்தை அறிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. இப்போது அறிவித்திருக்கும் 800 பில்லியன் டாலர்களை, நிதி நிறுவனங்களின் வராக்கடன்களை ஏற்றுக்கொள்வதற்கும், அடமான திட்டத்தின்படி உள்ள செக்யூரிட்டிகளை ஏற்றுக்கொள்வதற்கும் கொடுக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: