Wednesday, November 26, 2008

650 மேனேஜர் லெவல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கிறது ஐ.டி.பி.ஐ பேங்க்

சர்வதேச அளவில் நிதித்துறையில் கடும் குழப்பம் ஏற்பட்டு, அதனால் நிறைய வங்கிகளை மூடக்கூடிய நிலைக்கு வந்திருந்தும்; இன்னும் பல வங்கிகள் செலவை குறைக்கும் விதமாக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருந்தாலும் இந்தியாவின் ஐ.டி.பி.ஐ.வங்கி புதிதாக 650 பேரை மேனேஜர் லெவல் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது. இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா ( ஐ.டி.பி.ஐ.), அதவன் ரீடெய்ல் பேங்கிங் வேலைக்காக 256 பேரை மேனேஜர் வேலைக்கும், இன்னொரு 220 பேரை அதன் நிதித்துறைக்கு மேனேஜர் வேலைக்கும் எடுக்க இருக்கிறது. இன்னொரு 176 பேரை நிதித்துறையில் உதவி ஜெனரல் மேனேஜர் வேலைக்கு எடுக்கவும் அந்த வங்கி திட்டமிட்டிருக்கிறது. மார்ச் 2008 வரை அந்த வங்கியின் அக்கவுன்டன்ஸி, மேனேஜ்மென்ட், இஞ்சினியரிங், சட்டம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பேங்கிங், மற்றும் பொருளாதாரத்துறையில் மொத்தம் 8,989 பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த எண்ணிக்கைதான் இனிமேல் கூட்டப்படுகிறது. இவர்கள் தவிர இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க், இந்த நிதி ஆண்டுக்குள் 25,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக சொல்லியிருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே இந்திய வங்கிகள் யாரையும் புதிதாக வேலைக்கு எடுக்கவில்லை. இந்த வருடத்தில் நாங்கள் கிரிக்கள் லெவலில் 20,000 பேரையும் சூப்பர்வைசர் லெவலில் 5,000 பேரையும் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று ஸ்டேட் பாங்க் கின் சேர்மன் ஓ.பி.பாத் தெரிவித்தார்.

No comments: