Thursday, November 6, 2008

கடனுக்கான வட்டியை குறைத்தது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கடனுக்கான வட்டியை 0.75 சதவீதம் குறைத்திருக்கிறது. இப்போது 13.75 சதவீதமாக இருக்கும் வட்டி, வரும் திங்கட்கிழமையில் இருந்து 13 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்று அந்த வங்கியின் தலைவர் ஓ.பி.பாத் இன்று தெரிவித்தார். இந்தியாவில் அதிக அளவில் கடன் கொடுக்கும் வங்கி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தான். எஸ்.பி.ஐ.,இப்போது வட்டியை குறைத்திருப்பதால் மற்ற வங்கிகளும் விரைவில் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் பேங்க்,யூனியன் பேங்க், யுகோ பேங்க், சின்டிகேட் போன்ற பொதுத்துறை வங்கிகள் வட்டியை குறைத்திருக்கின்றன. கடந்த செவ்வாய் அன்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, வட்டியை குறைக்க சொல்கி கேட்டிருந்தபோது, அவர்கள் வட்டியை 0.75 சதவீதம் வரை குறைக்க ஒத்துக்கொண்டிருந்தனர். நேற்று, மத்திய நிதித்துறை செயலர் அருண் ராமநாதன், தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி வட்டியை குறைக்க சொல்லி கேட்டிருந்தார். அப்போது அவர்களும் இன்னும் இரண்டு வாரங்களில் வட்டியை குறைப்பதாக தெரிவித்தனர். சமீபத்தில் சி.ஆர்.ஆர்.,மற்றும் ரிபோ ரேட் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி குறைத்ததின் விளைவாக வங்கிகளில் ரூ.2,60,000 கோடிக்கும் அதிகமாக பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: