Thursday, November 6, 2008

பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்றாலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியாலும் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையப்போகிறது என்றும் முதலீட்டாளர்களிடையே தகவல்கள் கசிந்ததை அடுத்து பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. டவ் ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் ஆவரேஜ் 486.01 புள்ளிகள் ( 5.05 சதவீதம் ) குறைந்து 9,139.27 புள்ளிகளாக இருந்தது. நாஸ்டாக் கில் 98.48 புள்ளிகள் ( 5.53 சதவீதம் ) குறைந்து 1,681.64 புள்ளிகளாக இருந்தது. எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ் 52.98 புள்ளிகள் ( 5.27 சதவீதம் ) குறைந்து 952.77 புள்ளிகளாக இருந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியை அவர் சமாளித்தாக வேண்டும். ஆனால் அவரோ ஜனவரி 20 ம் தேதிதான் அதிபராக பதவி ஏற்பார். அதுவரை பிரச்னை காத்திருக்குக்காது. அமெரிக்காவில் வேலையில்லாதேர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, வீடுகளின் மதிப்பு குறைந்திருப்பது போன்ற பிரச்னைகளை அவர் சரி செய்தாக வேண்டியிருக்கிறது.
நன்றி : தினமலர்

No comments: