
'இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைக்கு உட்பட்டு இரண்டு வாரத்திற்குள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளன' என்றார்.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சர் கூறுகையில், 'பொருளாதாரத்தின் நலன் கருதி வட்டியை குறைக்க ஒரு மித்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் அன்றாட நிலைமையை ஆய்வு செய்து விரைவில் இது தொடர்பான அறவிப்பை வெளியிடுவோம்' என்றார். இதற்கிடையில், பல்வேறு கடன்களுக்கான வட்டிக்கு 75 அடிப்படை புள்ளிகளை குறைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் தேர்தல், அதற்குப் பின் லோக்சபா தேர்தல் வரும் சமயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக மேற்கொண்ட சில பொருளாதார நடவடிக்கைகள், தொழில்துறையிடம் நம்பிக்கை ஏற்படுத்த உதவும்.
வெளிப்படையாக அவர், தொழிலதிபர்களிடம், 'வேலைவாய்ப்பைப் பறித்து விடாதீர்கள்' என்று கூறி அதை உத்தரவாதமாகப் பெற்றவிதம் அவரை நல்ல ஒரு பொருளாதார சிந்தனையாளர் என்று காட்டியிருக்கிறது. இதன் பலன் தேர்தலில் காங்கிரசுக்கு வரும் என்றாலும் வங்கிகள் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கை மூலம் பணப்புழக்கத்திற்கும், பொருளாதார நெருக்கடியைத் தளர்த்துவதற்கும் பிரதமர் முன்னுரிமை தருகிறார் என்ற கருத்து எழுந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment