Wednesday, November 5, 2008

சிங்கூரில் டாடாவுக்கு பதில் சீன ஆட்டோ நிறுவனம் ?

மேற்கு வங்கம் சிங்கூரில் இருந்து டாடா வெளியேறி விட்டதால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. அதில் வேறு ஏதாவது தொழிற்சாலையை துவங்க வைக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் இடது சாரி கட்சி ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் நேற்று சீன வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் வொர்க்ஸ் என்ற நிறுவனம் கோல்கட்டா வந்து அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த நிறுவனம், உலகில் 19 நாடுகளில் தொழிற்சாலை வைத்திருக்கும் உரால் இந்தியா லிமிடெட் என்ற இன்னொரு பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து, சிங்கூரில் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ முயற்சி செய்வதாக தெரிகிறது. எனவே நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது உரால் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ஷராப்பும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்திற்குப்பின் ஷராப், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, நாங்கள் ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிங்கூரில் தொழிற்சாலை அமைக்க அதிக ஆவலுடன் இருக்கிறோம். அவர்களுக்கும் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து துவங்குவதாக இருக்கும் தொழிற்சாலைக்காக கல்யாணி, கராக்பூர், ஹால்டியா போன்ற இடங்களை பார்வையிட இருக்கிறோம் என்றார். இது குறித்து அரசு அதிகாரிகள் பேசியபோது, மேலே குறிப்பிட்ட இடங்களை அவர்கள் பார்வையிட இருந்தாலும் எங்கள் மனதில் சிங்கூர்தான் இருந்துகொண்டிருக்கிறது. சீன நிறுவனம் ஆரம்பத்தில் பெரிய டிரக் மற்றும் மினி பஸ்களை மட்டுமே தயாரிக்கும். இந்த கூட்டு நிறுவனத்திற்கு 600 ஏக்கர் நிலம் மட்டுமே தேவையானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்