Wednesday, November 5, 2008

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : 500 புள்ளிகளை இழந்தது

மும்பை பங்கு சந்தை மீண்டும் ஒரு சோதனையான நாளை சந்தித்திருக்கிறது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி 5 சதவீதத்தை இழந்திருக்கிறது. சர்வதேச பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்கு சந்தையையும் பாதித்தது. இன்றும் அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டன. ஆயில், மெட்டல், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ், டெலிகாம் துறை அதிகம் பாதிக்கப்பட்டன. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், செய்ல், டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் அதிகம் வீழ்ச்சி அடைந்திருந்தன. காலை வர்த்தக ஆரம்பத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகளும் நிப்டி 90 புள்ளிகளும் உயர்ந்திருந்தாலும், காலை 10.40 க்குப்பின் குறைய துவங்கியது. அது அப்படியே தொடர்ந்து மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 511.11 புள்ளிகள் ( 4.81 சதவீதம் ) குறைந்து 10,120.01 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 147.15 புள்ளிகள் ( 4.68 சதவீதம் ) குறைந்து 2,994.95 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

No comments: