Saturday, November 1, 2008

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 67 டாலராக உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.85 டாலர் உயர்ந்து 67.81 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 1.61 டாலர் உயர்ந்து 65.32 டாலராக இருந்தது. எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதால், அதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிட்டால் அக்டோபர் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை மிக குறைவே. உலகில் அதிகம் பெட்ரோலை உபயோகிக்கும் நாடான அமெரிக்காவும் மற்ற நாடுகளும் பெட்ரோலிய உபயோகத்தை கனிசமாக குறைத்து விட்டதால் கச்சா எண்ணெய் விலை 32 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது வெறும் 67.81 டாலர்தான். பாதிக்கும் மேலே குறைந்திருக்கிறது. கடந்த வாரம் கூடிய ஓபக் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியை அந்த நாடுகள் குறைத்த பின்னும் விலை ஒன்றும் அவ்வளவாக உயரவில்லை. ஓபக் நாடுகள் எண்ணெய் சப்ளையை குறைக்க இருப்பதாக வந்த தகவலால்தான் நேற்று கொஞ்சம் விலை உயர்ந்திருக்கிறது. குவைத்தும் அதன் பங்கிற்கு நவம்பர் மாதத்தில் 5 சதவீத சப்ளையை குறைக்கப்போவதாக அதன் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி விட்டது. நைஜீரியாவும் யுனைட்டட் அரபு எமிரேட்ஸ்ம் கூட சப்ளையை குறைக்கப்போவதாக சொல்லி விட்டது. ஆனால் உலகில் அதிகம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா இதுவரை இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஓபக் அமைப்பு நாடுகள்ற இன்னும் 10 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தியை தினமும் குறைக்க வேண்டும் என்றும், எண்ணெய் விலையை பேரல் ஒன்றுக்கு குறைந்தது 70 முதல் 80 டாலர் என்று முடிவு செய்ய வேண்டும் என்று வெனிசுலா சொல்லி வருகிறது.
நன்றி : தினமலர்


No comments: