Friday, October 31, 2008

பணவீக்கம் குறைவதால் பலன் வருமா?

கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத வகையில், பணவீக்கம் 10.68 சதவீதமாகக் குறைந்தது. இதனால், இதுவரை ரிசர்வ் வங்கியும், அரசும் எடுத்த நடவடிக்கைகள் பலன் தரத் துவங்கியது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நிதியமைச்சகக் கருத்துப்படி, முக்கியமான 30 பொருட்கள் விலை சிறிது குறைவே. இதுவரை 11 சதவீதம் என்று அச்சுறுத்திய அளவில் இருந்து 10.68 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. பணவீக்கம் குறைவதால், ரிசர்வ் வங்கி இனி மேலும் 'வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை' குறைக்க வாய்ப்பு அதிகம் என்று எச்.டி.எப்.சி., வங்கி தலைமை பொருளாதார நிபுணர் பரூவா கருத்து தெரிவித்திருக்கிறார். பொதுவாக கடந்த சில நாட்களாக வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் சந்தித்து வரும் நிதி நெருக்கடி குறைய வேண்டும் என்ற கட்டத்திற்கு அரசு சிந்தித்து, அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இல்லாவிட்டால், தொழில் துறை தேக்கம் ஏற்படும் போது அதிகளவு வேலைவாய்ப்பு குறையும். தற்போது, அதிகளவில் எண்ணிக்கை இருப்பதாகக் கூறி பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பல பெரிய நிறுவனங்கள் இறங்கியிருப்பதாக பேச்சு உள்ளது. அதே சமயம், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும், பலன் இருக்காது என்றும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகம் சரிவதை எளிதில் தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்ற பேச்சே இல்லை என்று பெட்ரோலிய அமைச்சர் தியோரா கருத்து தெரிவித்தார். சமையல் காஸ் விலை மட்டும் குறையும் என்று வெளியான தகவலையும் நேற்று அவர் மறுத்தார்.
நன்றி : தினமலர்


No comments: