Wednesday, October 29, 2008

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை : மத்திய அரசு அதிகாரிகள்


இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் போக்கை தொடர்ந்து கொஞ்சம் நாட்களுக்கு கண்காணித்தபின்பே அது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன் தெரிவித்தார். இன்னும் சில வாரங்களுக்கு கச்சா எண்ணெய் விலையின் போக்கை நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம். அதன் பின்னரே விலை குறைப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 57 டாலருக்கும் குறைவாக வந்தால்தால் பெட்ரோல் விலை குறைப்பது பற்றி முடிவு செய்ய முடியும் என்று ஏற்கனவே மத்திய அரசு சொல்லி வந்துள்ளது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை கடந்த வாரத்தில் பேரலுக்கு 64 டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று புதன் கிழமை பேரலுக்கு 1.99 டாலர் உயர்ந்து 64.72 டாலராக இருக்கிறது.

நன்றி : தினமலர்


No comments: