Wednesday, October 29, 2008

ஓரளவு வளர்ச்சியுடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை ஓரளவு வளர்ச்சியுடன் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில், சில டெக்னாலஜி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இருந்தாலும் பார்மா, குறிப்பிட்ட சில ரியாலிட்டி, கேப்பிடல் குட்ஸ் பங்குகள் பின்தங்கி இருந்தன. இன்று சென்செக்ஸ் அதிகபட்சமாக 9,297.76 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 8,894.34 வரையிலும் சென்றது. முடிவில் 36.43 புள்ளிகள் ( 0.4 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 9,044.51 புள்ளிகளில் முடிந்தது. நிப்டி, அதிகபட்சமாக 2,781.25 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 2,631.90 புள்ளிகள் வரையிலும் சென்று பின்னர் 12.45 புள்ளிகள் ( 0.46 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 2,697.05 புள்ளிகளில் முடிந்துள்ளது. ஹிண்டல்கோ மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் முறையே 18 மட்டும் 12 சதவீதம் உயர்ந்திருந்தது. மகிந்திரா அண்ட் மகிந்திரா, விப்ரோ, ஏசிசி, ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், அம்புஜா சிமென்ட்ஸ், மற்றும் பிபிசிஎல் போன்றவைகள் 4.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை உயர்ந்திருந்தனற. இருந்தாலும் சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், மற்றும் ரான்பாக்ஸி பங்குகள் 10 - 11.5 சதவீதம் சரிந்திருந்தன. டிஎல்எஃப், சத்யம், ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி, சீமன்ஸ் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவை 3 - 9 சதவீதம் சரிந்திருந்தன.
நன்றி : தினமலர்

No comments: