Wednesday, October 29, 2008

அடிமட்டத்திற்கு போனது ஏன்? : சேதுராமன் சாத்தப்பன்

நேற்று முன்தினம் சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளுக்கு வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சியமாக அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் அனைத்தும், நேற்று முன்தினம் காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து வருட இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல ப்ளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசும் நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத்திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள் கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இல்லாவிடில் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக மும்பை பங்குச் சந்தை 191 புள்ளிகள் குறைந்து 8,509 புள்ளிகளில் முடிவடைந்தது. டிரைவேடிங்க் டிரேடிங் நாளை முடிவடைவதால், ஷார்ட் கவரிங் பொசிஷன்களை பலரும் கவர் செய்ததால் சந்தை தப்பியது.
நன்றி : தினமலர்


No comments: