Monday, September 1, 2008

அமெரிக்க நிறுவனத்தை வாங்குது எச்.சி.எல்.,

அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப சேவையில் பிரபலமான கன்ட்ரோல் பாயின்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை, இந்தியாவின் முன்னணி நிறுவனம் எச்.சி.எல்., வாங்க முடிவு செய்துள்ளது.இதற்காக, 100 கோடி ரூபாய் அளித்து இந்த நிறுவனத்தை வாங்க எச்.சி.எல்., நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தொலைதொடர்பு மேலாண்மை சேவையை செய்து வரும் இந்த அமெரிக்க நிறுவனத்துக்கு பல நாடுகளில் கணிசமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிறுவனங்களுக்கு தொலைதொடர்பு மேலாண்மை சேவையை இந்த நிறுவனம் செய்து வருகிறது.இந்த நிறுவனத்தில் பணியாற்றும் திறமைவாய்ந்த 200 நிபுணர்கள், இனி எச்.சி.எல்., நிறுவனத்துக்கு வருவதால், சர்வதேச அளவில் எச்.சி.எல்., தன் சாப்ட்வேர் சேவையை விரிவுபடுத்த முடியும்.பார்ச்சூன் இதழ் அங்கீகரித்த 500 நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களுக்கு கன்ட்ரோல் பாயின்ட் நிறுவனம் தான் சேவை செய்து வருகிறது என்பதால், அந்த சேவையை எச்.சி.எல்., தொடருவதுடன், வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடியும்.மேலும், பி.பி.ஓ., வர்த்தகத்தையும் எச்.சி.எல்., இதன் மூலம் அதிகரித்துக் கொள்ளவும் வழி ஏற்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: