இந்தியாவில் எப்.எம்., ரேடியோ தொழிலின் வருவாய், கடந்தாண்டை விட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் வருவாய், 800 கோடி ரூபாயை எட்டி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எப்.எம்., ரேடியோ ஒலிபரப்புக்கு தனியார் நிறுவனங்களை அனுமதித்ததன் மூலம், இந்தியாவில் எப்.எம்., ரேடியோ பிரபலமடைந்துள்ளது. அதன் வருவாயும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் இத்தொழிலின் வருவாய், 550 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.350 கோடியாக இருந் தது. இந்த ஆண்டு இறுதிக்குள் வருவாய் 800 கோடி ரூபாயை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, அகில இந்திய ரேடியோ ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் அபூர்வா கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் 30 நகரங்களில் மட்டுமே எப்.எம்., ரேடியோ ஒலிபரப்பானது. தற்போது, 91 நகரங்களில் ஒலிபரப்பாகிறது. நாடு முழுவதும் 65 சதவீத நகர்ப்புறங்களில் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 'டிவி'யை விட எப்.எம்., ரேடியோ நிகழ்ச்சிகள் அதிக மக்களை சென்றடைகிறது. 'டிவி' ஒளிபரப்பை விட இதற்கு செலவு குறைவு. தற்போது, எப்.எம்., ரேடியோ, நகர்ப்புற மக்களின் மிக முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக உருவெடுத்துள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும்போதுகூட, மொபைல் போன் மூலமாக எப்.எம்., ரேடியோவை கேட்க முடிகிறது. 16 சதவீதம் பேர் மொபைல் போன் மூலமாக எப்.எம்., ஒலிபரப்பை கேட்கின்றனர்.இவ்வாறு அபூர்வா கூறினார்.
நன்றி : தினமலர்
2 comments:
தகவலுக்கு நன்றி
tamil cinema வருகைக்கு நன்றி
Post a Comment