Thursday, August 21, 2008

எலக்ட்ரிக் காரை வெளியிடுகிறது ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி, 2013ல் எலக்ட்ரிக் காரை தயாரித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்கிடையில் பேட்டரியில் ஓடும் மூன்று சக்கர வாகனம் ஒன்றையும் அது வெளியிட இருக்கிறது. மேலும் அதன் இ பைக் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த நிதி ஆண்டில் புதிதாக இரண்டு ஹைஸ்பீடு இ பைக்களை அறிமுகப்படுத்துகிறது.சோலார் எனர்ஜியில் ஓடும் வாகனங்களை தயாரிக்கும் முயற்சியிலும் ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி ஈடுபட இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். எனவே வாகனங்களை எலக்ட்ரிக் மயமாக்கும் ஆராய்ச்சிக்கு அதிக அளவு முதலீடு செய்கிறோம். எலக்ட்ரிக் வாகன சந்தையில் நாங்கள் முன்னணியில் இருக்க விரும்புகிறோம் என்றார் ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனியில் தலைமை செயல் அதிகாரி சோகிந்தர் கில். அவர் மேலும் தெரிவித்தபோது, இன்னும் ஐந்து வருடங்களில் மூன்று மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் காரை இங்கு அறிமுகப்படுத்தி விடுவோம் என்றார். இப்போது அவர்கள் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே இருக்கும் பேட்டரி காருக்கு செலவு அதிகமாகிறது. எனவே அது நமக்கு லாபகரமாக இருக்காது. எனவேதான் நாங்கள் கெப்பாசிடர்களை பயன்படுத்த இருக்கிறோம். அதன் மூலம் உடனுக்குடன் சார்ஜ் செய்து கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம் என்றார் கில். இந்திய கண்டிஷனுக்கு ஒத்து வரக்கூடிய வகையிலும் நாங்கள் காரை வடிவமைக்கிறோம் என்றார் அவர். இவர்களின் மூன்று மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் கார்கள் லூதியானாவில் இருக்கும் அவர்களது தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட இருக்கிறது.
நன்றி : தினமலர்

No comments: