Thursday, August 21, 2008

கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது


சர்வதேச சந்தையில் இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர ஆரம்பித்து விட்டது. நியுயார்க் மெர்கன்டைல் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.14 டாலர் ( அல்லது 1 சதவீதம் ) உயர்ந்து 116.70 டாலராக இருக்கிறது.லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 89 சென்ட் ( அல்லது 0.8 சதவீதம் ) உயர்ந்து 115.25 டாலராக இருக்கிறது. போலந்தில் ஏவுகணை தடுப்பு கருவி ஒன்றை நிறுவ அமெரிக்கா போலந்து அரசுடன் ஒப்பந்தம் செய்திருப்பதை அடுத்து ரஷ்யா கோபமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் இருந்து சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் அளவு குறையும் என்கிறார்கள். மேலும் ஜார்ஜியா மீது ரஷ்யா படையெடுத்ததால் காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் 1.1 மில்லியன் பேரல்கள் குறைந்திருக்கிறது. இது தவிர அமெரிக்காவின் எண்ணெய் சப்ளையிலும் கடந்த வாரம் 6.2 மில்லியன் பேரல்கள் குறைந்திருப்பதாக சொல்கிறார்கள்.ஜூலை 11ம் தேதி, வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவாக 147.27 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 21 சதவீதம் குறைந்திருக்கிறது.

நன்றி : தினமலர்


No comments: