Friday, August 22, 2008

பங்கு சந்தையில் முன்னேற்றம் : ஒரு சதவீதம் உயர்ந்தது

மும்பை பங்கு சந்தை இன்று முன்னேறி இருந்தது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சம் உயர்ந்தும் கொஞ்சம் குறைந்தும் தள்ளாடிக் கொண்டு இருந்த பங்கு சந்தை, மதியத்திற்குப்பின் உயர்ந்த நிலையிலேயே இருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 157.76 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) உயர்ந்து 14,401.49 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 43.60 புள்ளிகள் ( 1.02 சதவீதம் ) உயர்ந்து 4,327.45 புள்ளிகளில் முடிந்தது. 4300 புள்ளிகளுக்கும் கீழே போயிருந்த நிப்டி இன்று மீண்டும் 4300க்கு மேல் சென்று விட்டது. பணவீக்கம் 12.44 சதவீதத்தில் இருந்து 12.63 சதவீதமாக உயர்ந்திருந்தது சிறிது பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ஐரோப்பிய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் அது மதியத்திற்கு மேல் இந்திய பங்கு சந்தையிலும் ஏற்ற நிலையை கொண்டு வந்தது.
நன்றி : தினமலர்


No comments: