Tuesday, August 19, 2008

இன்டர்நெட் போன்: 'டிராய்' அனுமதி எஸ்.டி.டி., கட்டணங்கள் குறையும்

'இன்டர்நெட் தொலைபேசி சேவை'க்கு டிராய் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, எஸ்.டி.டி., கட்டணங்கள் வெகுவாகக் குறையும். இன்டர்நெட் இணைப்பு பெற்றவர்கள் தற்போது, கம்ப்யூட்டரில் இருந்தபடி மற்றொரு கம்ப்யூட்டரில் உள்ள நபரிடம் இன்டர்நெட் மூலம், 'வாய்ஸ் கால்' தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதை மாற்றி, கம்ப்யூட்டரில் இருந்து நிரந்தர இணைப்பு கொண்ட தொலைபேசி லைன் மற்றும் மொபைல் போனுடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும், இன்டர்நெட் சேவை மையங்கள் இன்டர்நெட் தொலைபேசி சேவையை நடத்த அனுமதிக்கப்படும். இதன் மூலம், இன்டர்நெட் சேவை மையங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கக்கூடும். எஸ்.டி.டி., தொலைபேசியை வழங்கும் ஆபரேட்டர்கள், இன்டர்நெட் சேவை மையங்களுடன் இணைந்து இன்டர்நெட் வழியாக எஸ்.டி.டி., சேவையை நடத்தலாம். இதன் மூலம், இரு தரப்பினரும் பயன் பெற முடியும் என டிராய் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. இன்டர்நெட் தொலைபேசிக்கான எண்கள் ஒதுக்கீடு குறித்து தொலைதொடர்பு இன்ஜினியரிங் மையம் மற்றும் தொலைதொடர்புத் துறையின் தொழில் நுட்பக் குழுவும் இணைந்து முடிவு செய்யும். 'டிராய்' அமைப்பின் இந்த நடவடிக்கை காரணமாக எஸ்.டி.டி., கட்டணங்கள் வெகுவாகக் குறையும்.
நன்றி : தினமலர்


2 comments:

வடுவூர் குமார் said...

ஐ எச் டி?

பாரதி said...

வடுவூர் குமார் வருகைக்கு நன்றி

அது என்ன ஐ எச் டி?