Monday, August 25, 2008

இந்தியாவில் 3ஜி சர்வீர் கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவு பணத்தை கொட்ட வேண்டியிருக்கும்

இந்தியாவில் இப்போது மூன்றாம் தலைமுறை ( 3 ஜி ) மொபைல் சர்வீஸை கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த 3 ஜி சேவையை கொடுக்க முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அது பொருளாதார ரீதியாக அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்கிறார்கள். இதற்காக அவர்கள் பெருமளவு பணத்தை இங்கு கொட்டவேண்டியிருக்கும் என்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் சுமார் 50 லட்சம் மொபைல் சந்தாதாரர்களுக்கு 3 ஜி சர்வீஸ் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். சர்வதேச அளவில் 3 ஜி சர்வீஸ் கெடுத்து அனுபவமுள்ள நிறுவனங்கள், இங்கு ஏலத்தின் மூலம் 2.1 ஜிகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் பெற்று சர்வீஸ் கொடுக்க முன்வந்தால், அவர்கள் முதலில் யுனிவர்சல் அக்ஸஸ் சர்வீஸ் லைசன்ஸ் ( யு ஏ எஸ் எல் ) என்ற ஒன்றை பெற வேண்டும். இந்தியா முழுவதுக்கும் 3 ஜி சர்வீஸ் கொடுக்க யு ஏ எஸ் எல் பெற அவர்களுக்கு ரூ.1,651 கோடி கட்டணம் ஆகும். ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் எடுக்க ரூ.7,500 - 8,000 கோடி செலவாகும். எனவே லைசன்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் வாங்க மட்டும் அவர்கள் ரூ.9,651 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும். மேலும் 50 லட்சம் சந்தாதாரர்களுக்கு சர்வீஸ் கொடுக்க தேவையான சாதனங்கள் வாங்க மற்றும் நிர்வாக செலவு ரூ. 7,500 கோடி ஆகும் என்கிறார்கள். எனவே மொத்தமாக ஒரு வெளிநாட்டு நிறுவனம் இங்கு 3 ஜி சர்வீஸ் கொடுக்க வந்தால் முதலில் அவர்கள் ரூ.17,151 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். மேலும் இப்போது சராசரியாக ஒரு சந்தாதாரரிடமிருந்து கிடைத்து வரும் ரூ.200 வருமானமும் 3 ஜி சர்வீஸ் கொடுக்கும்போது அது ரூ.150 ஆக குறைந்து விடும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: