Friday, September 19, 2008

அமெரிக்காவின் தலையீட்டால் மீண்டும் எழுந்தது பங்கு சந்தை

கடந்த 10 மாதங்களாக அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்து வரும் நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடியை சமாளித்து, சகஜ நிலைக்கு கொண்டு வர அமெரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுதிலும் இன்று பங்கு சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சீனாவும் அதன் பங்கிற்கு, பங்குகளை வாங்குபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ஸ்டாம்ப் டூட்டியை நிறுத்தி விட்டது.இதன் காரணமாக அங்குள்ள ஹாங்செங் 9.61 சதவீதம் உயர்ந்திருந்தது. ஜப்பானின் நிக்கி 3.76 சதவீதம், தைவான் 5.82 சதவீதம், கோஸ்பி 4.55 சதவீதம், ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ் 5.78 சதவீதம், ஜகர்தா 5.82 சதவீதம் உயர்ந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தையிலும் எப்.டி.எப்.சி., 8 சதவீதம், சி.ஏ.சி.,6.4 சதவீதம், டி.ஏ.எக்ஸ்.,4 சதவீதம் உயர்ந்திருந்தது. கடந்த திங்களில் இருந்து நேற்று வரை 21 சதவீத புள்ளிகளை இழந்திருந்த ரஷ்ய பங்கு சந்தைகள் இன்று 20 சதவீத புள்ளிகளை மீட்டன. உலகம் முழுவதிலுமிருந்து வந்த இந்த சாதகமான செய்தியை அடுத்து இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயரத்துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 726.72 புள்ளிகள் ( 5.46 சதவீதம் ) உயர்ந்து 14,042.32 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 207.10 புள்ளிகள் ( 5.13 சதவீதம் ) உயர்ந்து 4,245.25 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெரும் லாபம் பார்த்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எப்.சி., ஓ.என்.ஜி.சி., எல் அண்ட் டி, ஹெச்.டி.எப்.சி.பேங்க், பார்தி ஏர்டெல், சத்யம் மற்றும் பெல் நிறுவனங்கள்.
நன்றி : தினமலர்


Thursday, September 18, 2008

உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி : இந்தியா இழந்ததை மீண்டது

உலகம் முழுவதும் இன்று காலை பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஜப்பானில் கடும் வீழ்ச்சியில் இருந்த பங்கு சந்தையை மீற்க, பேங்க் ஆப் டோக்கியோ கூடுதலாக 14.4 பில்லியன் டாலர்களை நிதி சந்தையில் புழக்கத்திற்கு விட்டிருக்கிறது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கியின் சராசரி 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது. தென்கொரிய சந்தையில் இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆசியா முழுவதும் இந்த வாரத்தில் மட்டும் அந்தந்த நாட்டு ரிசர்வ் வங்கிகளால் மொத்தம் 33 பில்லியன் டாலர்கள் நிதி சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சந்தை சரிந்துகொண்டுதான் இருக்கிறது. ஹாங்காங்கின் ஹேங்செங்க் 5 சதவீதம், தைவானின் வெயிட்டட் 4.5 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 3.5 சதவீதம் குறைந்திருந்தது. திவால் நிலைக்கு சென்ற ஏ.ஐ.ஜி. இன்சூரன்ஸ் நிறுவத்திற்கு, 85 பில்லியன் கடன் கொடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி காப்பாற்றினாலும் அங்கும் பங்கு சந்தையில் 4 சதவீத சரிவு ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் பெரும் சரிவுதான்.இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையும் கடும் பாதிப்பிற்குள்ளானது. மும்பை பங்கு சந்தையில் காலை 10.00 மணி அளவில் சென்செக்ஸ் 649 புள்ளிகள் குறைந்து 12,613 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 174 புள்ளிகள் குறைந்து 3,833 புள்ளிகளாக இருந்தது. கட்டுமானம், டெலிகாம், டெக்னாலஜி, மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் படு பாதாளத்திற்கு சென்றன. பி எஸ் இ இன் எல்லா இன்டக்ஸூமே சிகப்பில் தான் இருந்தன. ஆனால் மத்திய அமைச்சரின் பேச்சு மதியம் வெளியான பின்பு இந்திய பங்கு சந்தை மீண்டும் உயிர் பெற்றது. அமெரிக்காவின் நிதி நிறுவனமான லேமன் பிரதர்ஸ் திவாலானதால் இந்திய வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொன்ன அவர், இந்திய பொதுத்துறை வங்கி எதுவும் லேமன் பிரதர்ஸூடன் தொடர்பு வைத்திருக்கவில்லை, எனவே எந்ந ஒரு இந்திய வங்கியும் பாதிக்கப்படாது என்றார். ஒரு வேளை இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிந்து வருமானால் அதனை சரிக்கட்டவும் மத்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் என்றார். அவரது அறிக்கை வெளியான பின்பு பங்கு சந்தை, காலையில் இழந்த புள்ளிகள் மீட்க ஆரம்பித்தது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 52.70 புள்ளிகள் ( 0.4 சதவீதம் ) உயர்ந்து 13,315.60 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 29.90 புள்ளிகள் ( 0.75 சதவீதம் ) உயர்ந்து 4,038.15 புள்ளிகளில் முடிந்தது.
நன்றி : தினமலர்


உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி

உலகம் முழுவதும் இன்று பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஜப்பானில் கடும் வீழ்ச்சியில் இருந்த பங்கு சந்தையை காப்பாற்ற பேங்க் ஆப் டோக்கியோ கூடுதலாக 14.4 பில்லியன் டாலர்களை நிதி சந்தையில் புழக்கத்திற்கு விட்டிருக்கிறது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கியின் சராசரி 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது. தென்கொரிய சந்தையில் இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆசியா முழுவதும் இந்த வாரத்தில் மட்டும் அந்தந்த நாட்டு ரிசர்வ் வங்கிகளால் மொத்தம் 33 பில்லியன் டாலர்கள் நிதி சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சந்தை சரிந்துகொண்டுதான் இருக்கிறது. ஹாங்காங்கின் ஹேங்செங்க் 5 சதவீதம், தைவானின் வெயிட்டட் 4.5 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 3.5 சதவீதம் குறைந்திருந்தது. திவால் நிலைக்கு சென்ற ஏ.ஐ.ஜி. இன்சூரன்ஸ் நிறுவத்தை, 85 பில்லியன் கடன் கொடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி காப்பாற்றினாலும் அங்கும் பங்கு சந்தையில் 4 சதவீத சரிவு ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் பெரும் சரிவுதான்.இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையும் கடும் பாதிப்பிற்குள்ளானது. மும்பை பங்கு சந்தையில் காலை 10.00 மணி அளவில் சென்செக்ஸ் 649 புள்ளிகள் குறைந்து 12,613 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 174 புள்ளிகள் குறைந்து 3,833 புள்ளிகளாக இருந்தது. கட்டுமானம், டெலிகாம், டெக்னாலஜி, மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் படு பாதாளத்திற்கு சென்றன. பி எஸ் இ இன் எல்லா இன்டக்ஸூமே சிகப்பில் தான் இருந்தன.
நன்றி :தினமலர்


Wednesday, September 17, 2008

அமெரிக்க நிதிச் சந்தையில் பெரும் சுனாமி


நியூயார்க்:அமெரிக்க நிதிச் சந்தையில் தற்போது மையம் கொண்டுள்ள சுனாமியால், உலகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேமென் பிரதர்ஸ் வங்கி மற்றும் மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இன்சூ ரன்ஸ் நிறுவனமான அமெரிக்க இன்டர்நேஷனல் குரூப் கடும் நிதி சுனாமியில் சிக்கி திவால் நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதித்துறை வங்கியான லேமென் பிரதர்ஸ் திவாலாகி உலகம் முழு வதும் பொருளாதார சந்தைகளில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு நிதி நிறுவனமான மெரில் லிஞ்ச் கடும் நஷ்டத்தில் சிக்கியது. இதை, பாங்க் ஆப் அமெரிக்கா வாங்க முன்வந்ததையடுத்து பிரச்னை ஓரளவுக்கு தீர்ந்தது.இருப்பினும், அமெரிக்காவின் மேலும் பல வங்கிகள் நிலைமை தள்ளாட்டம் கண்டுள்ளதால், அமெரிக்க நிதிச் சந்தைகளில் மந்தமான சூழ்நிலை நிலவுகிறது. தற்போது, இந்த வரிசையில் அமெரிக்காவின் பிரபல இன்சூரன்ஸ் நிறுவ னமான(ஏ.ஐ.ஜி.,) அமெரிக்க இன்டர்நேஷனல் குரூப் கடும் நிதிச்சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இதில் இருந்து தப் பிக்க, நான்காயிரம் கோடி டாலர் உதவி தேவை என, ஏ.ஐ.ஜி., கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கி அதிகாரிகளும், ஜே.பி.மோர்கன் சேஸ் மற்றும் கோல்டுமேன் சாஸ் நிறுவனமும் ஏ.ஐ.ஜி.,யை காப்பாற்ற முயற்சி கள் மேற்கொண்டு வருகின்றன. எங்களால் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என, நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார்.ஏ.ஐ.ஜி.,யின் நிலைமை மோசமாகியதை அறிந்ததும் நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தது. மொத்தம் 60 சதவீத அளவிற்கு விலை சரிந்தது.நலிவடைந்த மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்தை ஐந்தாயிரம் கோடி டாலர் கொடுத்து வாங்க பாங்க் ஆப் அமெரிக்கா முன்வந்ததையடுத்து, நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் இதன் பங்குகள் 21.3 சதவீதம் குறைந்தது.நூற்றாண்டுக்கு ஒரு முறை அமெரிக்காவில் இது போன்ற நெருக்கடியை சந்திப்பது வாடிக்கை. நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க தீவிர கவனம் செலுத்தப்படும் என அதிபர் புஷ் அறிவித்துள்ளார். இதற்காக, அமெரிக்காவின் பெடரல் வங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெடரல் வங்கி (நம் நாட்டின் ரிசர்வ் வங்கியை போன்றது) பெருமளவில் நிதியை இறக்க இருக்கிறது.இதற்கிடையில் லேமென் பிரதர்ஸ் வங்கியின் ஆசிய துணை நிறுவனங்களான லேமென் பிரதர்ஸ் ஆசியா லிமிடெட், லேமென் செக்யூரிட்டிஸ் ஆசிய லிமிடெட், லேமென் பிரதர்ஸ் பியூச்சர்ஸ் ஆசிய லிமிடெட் ஆகியவை நேற்று தங்களது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி கொண்டுள்ளது. ஹாங்காங் பங்குச் சந்தையில் இந் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், லேமென் பிரதர்ஸ் வங்கியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜப்பான் பங்குச் சந்தையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஜப்பான் பிரதமர் முக் கிய அமைச்சர்களை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பாங்க் ஆப் ஜப்பான் உடனடியாக இர ண்டாயிரத்து 400 கோடிக்கு ஜப்பான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முன்வந்தது.ஊழியர்கள் கொதிப்பு: தங்களது வங்கி திவாலாகிவிட்டதால், லேமென் பிரதர்ஸ் வங்கியின் 25 ஆயிரம் ஊழியர்கள் கோபத்தில் உள்ளனர். நியூயார்க் தலைமை அலுவலகத்தில் கூடிய ஊழியர்கள் சிலர், அலுவலகத்தில் தங்களுக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் அட் டை பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதை எண்ணி கவலையடைந்துள்ளனர். அதே சமயம் மெரில் லிஞ்ச் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. திவாலாகாமல் தப்பித்து பாங்க் ஆப் அமெ ரிக்காவுடன் இணைந்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் எங்கள் வங்கியை காப்பாற்றிய பாங்க் ஆப் அமெ ரிக்கா பெரிய நிறுவனம் தான் என சில ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மீளவில்லை இந்திய பங்குச் சந்தை:மும்பை: கடும் சரிவை சந்தித்துள்ள இந்திய பங்குச் சந்தை நேற்றும் 300 புள்ளி களுக்கு மேல் சரிவுடன் தான் துவங்கியது. தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங் கினர். இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை சரிவை சந்தித்தன.இன்னும் இறங்குமா, முதலீடு செய்வதற்கு இப்போது ஏற்ற தருணமா என்று பல முதலீட்டாளர்களும் தயங்கி இருந்தனர்.இருப்பினும் சென்செக்ஸ் 13 ஆயிரத்தை நெருங்கிய போது பலரும் துணிச்சலுடன் பங்குகளை வாங்க முன் வந்தனர்.இதன் காரணமாக மதியத் திற்கு மேல் பங்குச் சந்தையில் முன்னேற்றம் தெரிந்தது.'நிப்டி'நான்காயிரம் புள்ளிகளுக்கு கீழாக வந்தது. அதிபர் புஷ் ஷின் அறிவிப்பு, ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் சற்றே ஏற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தையிலும் சற்று நம்பிக்கையைக் காண முடிந்தது.இதன் காரணமாக பலரும் ஆர்வமுடன் பங்குகளை வாங்க முன் வந்தனர்.கச்சா எண்ணெய் விலை குறைந்து 93 டாலருக்கும் கீழ் வந்ததால் பெட்ரோலிய துறை பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன.இறுதியில் 'சென்செக்ஸ்' 12 புள்ளிகள் சரிந்து 13 ஆயிரத்து 518 புள்ளிகளிலும், 'நிப்டி' இரண்டு புள்ளிகள் அதிகரித்து நான்காயிரத்து 74 புள்ளிகளிலும் நிலை பெற்றது.அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்ற போதிலும், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ. 20 ஆயிரம் கோடிகளுடன், பங்குச் சந்தை இன்னும் கீழ்நிலைக்கு வரும் என்று காத்து கொண்டு இருக்கின்றன. இப்போதுள்ள நிலையில் சென்செக்ஸ் 12 ஆயிரத்து 500க்கு கீழும், நிப்டி மூன்றாயிரத்து 800க்கு கீழும் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என பங்குச் சந்தை நோக் கர்கள் கூறுகின்றனர். பொதுவாக உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்படும் நிலை இருப்பதால் அமெ ரிக்காவின் பாதக சாதகங்கள் இங்கும் எதிரொலிக்கிறது.

நன்றி : தினமலர்

Tuesday, September 16, 2008

பங்கு சந்தையில் இன்றும் சரிவு நிலைதான்

அமெரிக்காவின் நிதி நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாததால், மும்பை பங்கு சந்தையில் இன்றும் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ் , அதிகபட்ச குறைவான 13,051.73 புள்ளிகளில் இருந்து 467 புள்ளிகள் மீண்டு வந்துள்ளது. அதே போல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி, அதிக பட்ச குறைவான 3,919.35 புள்ளிகளில் இருந்து 155 புள்ளிகள் மீண்டு வந்திருக்கிறது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.47 புள்ளிகள் ( 0.09 சதவீதம் ) மட்டும் குறைந்து 13,518.80 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2 புள்ளிகள் ( 0.05 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,074.90 புள்ளிகளில் முடிந்துள்ளது. காலையில் வேகமாக இறங்கி வந்த பங்கு சந்தை மாலையில் ஏறி வந்ததற்கு காரணம், அப்போது பேங்க் மற்றும் ஆயில் நிறுவன பங்குகள் வேகமாக வாங்கப்பட்டதுதான். கடைசி நேரத்தில் பங்கு சந்தை எழுந்ததில் பெரும் பங்காற்றியது ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி., பேங்க், பெல் மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவன பங்குகள்தான்.
நன்றி : தினமலர்

ஓபக் அமைப்பில் சேர விடுத்த அழைப்பை நிராகரித்தது பிரேசில்

பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான ஓபக் இல் சேரும்படி, பிரேசிலுக்கு சவுதி அரேபியா விடுத்த அழைப்பை பிரேசில் நிராகரித்துள்ளது. எங்கள் நாட்டின் ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து நாங்களே பயன்படுத்த போகிறோம்.நாங்கள் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யப்போவதில்லை. எனவே ஓபக் கில் சேரச்சொல்லி சவுதி அரேபியா விடுத்த அழைப்பை நாங்கள் நிராகரித்து விட்டோம் என்று பிரேசிலின் சுரங்கம் மற்றும் எனர்ஜி அமைச்சர் எடிசன் லாபோ தெரிவித்தார். பிரேசிலின் ஆழ்கடல் பகுதியில் புதிதாக எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் 55 பில்லியன் பேரல்கள் ( 5,500 கோடி பேரல்கள் ) கச்சா எண்ணெய் இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றை எடுத்து பயன்படுத்தினாலே பிரேசிலுக்கு போதுமானது என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 92 டாலராக குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து கொண்டே வருகிறது.நியுயார்க் சந்தையில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை நேற்று மட்டும் பேரலுக்கு 5.47 டாலர் குறைந்து 95.71 டாலராக இருந்தது. அதே போல லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 5.20 டாலர் குறைந்து 92.38 டாலராக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் இப்போது தான் கச்சா எண்ணெய் விலை இவ்வளவு அதிகமாக குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் கிணறுகள் இருக்கும் மெக்ஸிகோ வளைகுடா பகுதியை, ஐக் சுறாவளி எதிர்பார்த்த அளவுக்கு தாக்காமல் கடந்து சென்றுவிட்டதுதான் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதற்கு காரணம் என்கிறார்கள். இருந்தாலும் அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நிதிநிறுவனமான லேமன் பிரதர்ஸ் திவால் ஆனதாக அறிவித்திருந்தும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது ஆச்சரியம்தான். ஆனால் இதிலும் ஓரு ஆதரவான செய்தி என்னவென்றால், மோசமான நிதி நிலையில் இருக்கும் இன்னொரு நிதி நிறுவனமான மெரில் லிஞ்ச் சை பேங்க் ஆப் அமெரிக்கா வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறது. மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்திற்கு 40 பில்லியன் டாலருக்கும் மேல் வராக்கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனமான ஏ ஐ ஜி யும் இப்போது நிதி பிரச்னையால் தள்ளாடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்