Sunday, January 3, 2010

நாளை முதல் 9 மணிக்கு தொடங்குது இந்திய பங்குச்சந்தை

இந்த புது வருடம்(2010) முதல் இந்திய பங்குச்சந்தை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. டிசம்பர் 18ம் தேதி முதல் காலை 9 மணிக்கு வர்த்தக நேரம் மாற்றப்படுவதாக இருந்தது. ஆனால், இதற்கு புரோக்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் செபி அமைப்பிற்கு கடிதம் அனுப்ப போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், வர்த்தக நேரம் மாற்றம் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. <ணீ>இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை, 2010ம் ஆண்டின் முதல் பங்குவர்த்தக நாளான ஜனவரி 4ம் தேதி முதல் காலை 9மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக பங்குச்சந்தை காலை 9.55 மணிக்கு தொடங்கும். நாளை முதல் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணிக்கு முடியும்.
நன்றி : தினமலர்


No comments: