Monday, January 4, 2010

அதிக லாபத்தை அள்ளி தரும் இந்திய பங்குச்சந்தை: கணக்கெடுப்பில் தகவல்

உலகிலேயே வளரும் நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளில் அதிக லாபத்தை அள்ளி தரும் பங்குச்சந்தையாக இந்திய பங்குச்சந்தை விளங்குவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வளரும் நாடுகளின் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் மார்கன் ஸ்டான்லி காம்போசிட் பாரா குறியீட்டெண்கள் கணக்கிடப் படுகின்றன. அந்தக் குறியீட்டெண்கள் அடிப்படையில் இந்த லாப சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் படி, அதிக லாபத்தை தரும் பங்குச்சந்தைகளில் இந்திய பங்குச்சந்தை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இவற்றில் பிரேசில் 121 சதவீத லாபத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய பங்குச் சந்தை தந்த லாபம் 100.50 சதவீதம். . ரஷிய பங்குச்சந்தைகள் தந்த லாபம் 100.30 சதவீதம். சீன பங்குச்சந்தைகள் தந்த லாபம் 58 சதவீதம்தான்.
நன்றி : தினமலர்


No comments: